மேலும் அறிய

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின்பேரில் , எதிர்தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த 9 -ஆம் தேதி பட்டியலினத்தவர் தங்களது பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் சித்திரை  திருவிழா போலீஸ் அனுமதியுடன் எளிய முறையில் கொண்டாடினர். மூன்று நாட்கள் கழித்து தங்கள் கோவில் திருவிழா ஒட்டிய கலைநிகழ்ச்சி கொண்டாட்டத்துக்கு, போலீஸிடம் எந்த அனுமதியும் பெறாமல் மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கி கருவிகளை பயன்படுத்தி விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர் .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நேரத்தில், பட்டியல் இனத்தவர்களின் இந்த கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தால் நோய் பரவல் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக , அவர்களின் இந்த கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அனுமதி இன்றி நடை பெற்ற கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை நிறுத்தியதோடு இல்லாமல் அவர்கள் பயன்படுத்திய , மைக்செட், ஸ்பீக்கர்களை கைப்பற்றி சென்றனர் .

மே 14-ஆம் தேதி இது தொடர்பாக அந்த கிராமத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் பிற சாதியை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்தை கூட்டி . தங்களை மீறி கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால், பட்டியிலின நாட்டாமைக்காரர்களான சந்தானம் 65, திருமால் 68  மற்றும் ஆறுமுகம் 60 ஆகிய மூவரையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி , இரு பிரிவினரிடையே  சாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் விழுப்புரம் எஸ் பி மற்றும் கலெக்டர் ஒட்டனந்தல்  கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

மேலும் இருபிறவினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின் பேரில் , எதிர் தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக இன்று ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி , சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட சந்தானம் , திருமால் மற்றும் ஆறுமுகத்திற்கு தலா 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் .

தலைப்பு செய்திகள்

பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget