மேலும் அறிய

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின்பேரில் , எதிர்தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த 9 -ஆம் தேதி பட்டியலினத்தவர் தங்களது பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் சித்திரை  திருவிழா போலீஸ் அனுமதியுடன் எளிய முறையில் கொண்டாடினர். மூன்று நாட்கள் கழித்து தங்கள் கோவில் திருவிழா ஒட்டிய கலைநிகழ்ச்சி கொண்டாட்டத்துக்கு, போலீஸிடம் எந்த அனுமதியும் பெறாமல் மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கி கருவிகளை பயன்படுத்தி விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர் .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நேரத்தில், பட்டியல் இனத்தவர்களின் இந்த கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தால் நோய் பரவல் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக , அவர்களின் இந்த கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அனுமதி இன்றி நடை பெற்ற கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை நிறுத்தியதோடு இல்லாமல் அவர்கள் பயன்படுத்திய , மைக்செட், ஸ்பீக்கர்களை கைப்பற்றி சென்றனர் .

மே 14-ஆம் தேதி இது தொடர்பாக அந்த கிராமத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் பிற சாதியை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்தை கூட்டி . தங்களை மீறி கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால், பட்டியிலின நாட்டாமைக்காரர்களான சந்தானம் 65, திருமால் 68  மற்றும் ஆறுமுகம் 60 ஆகிய மூவரையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி , இரு பிரிவினரிடையே  சாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் விழுப்புரம் எஸ் பி மற்றும் கலெக்டர் ஒட்டனந்தல்  கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

மேலும் இருபிறவினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின் பேரில் , எதிர் தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக இன்று ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி , சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட சந்தானம் , திருமால் மற்றும் ஆறுமுகத்திற்கு தலா 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் .

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget