மேலும் அறிய

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின்பேரில் , எதிர்தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த 9 -ஆம் தேதி பட்டியலினத்தவர் தங்களது பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் சித்திரை  திருவிழா போலீஸ் அனுமதியுடன் எளிய முறையில் கொண்டாடினர். மூன்று நாட்கள் கழித்து தங்கள் கோவில் திருவிழா ஒட்டிய கலைநிகழ்ச்சி கொண்டாட்டத்துக்கு, போலீஸிடம் எந்த அனுமதியும் பெறாமல் மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கி கருவிகளை பயன்படுத்தி விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர் .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நேரத்தில், பட்டியல் இனத்தவர்களின் இந்த கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தால் நோய் பரவல் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக , அவர்களின் இந்த கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அனுமதி இன்றி நடை பெற்ற கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை நிறுத்தியதோடு இல்லாமல் அவர்கள் பயன்படுத்திய , மைக்செட், ஸ்பீக்கர்களை கைப்பற்றி சென்றனர் .

மே 14-ஆம் தேதி இது தொடர்பாக அந்த கிராமத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் பிற சாதியை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்தை கூட்டி . தங்களை மீறி கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால், பட்டியிலின நாட்டாமைக்காரர்களான சந்தானம் 65, திருமால் 68  மற்றும் ஆறுமுகம் 60 ஆகிய மூவரையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி , இரு பிரிவினரிடையே  சாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் விழுப்புரம் எஸ் பி மற்றும் கலெக்டர் ஒட்டனந்தல்  கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

மேலும் இருபிறவினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின் பேரில் , எதிர் தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக இன்று ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி , சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட சந்தானம் , திருமால் மற்றும் ஆறுமுகத்திற்கு தலா 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
International Conference Center : செங்கல்பட்டில் ரூ.525 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.! 10ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்- எப்போது திறப்பு.?
செங்கல்பட்டில் ரூ.525 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.! 10ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்- எப்போது திறப்பு.?
அடி தூள்.! தொகுப்பூதியம் ரூ.1500-லிருந்து ரூ.7376 -ஆக உயர்வு.! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! தொகுப்பூதியம் ரூ.1500-லிருந்து ரூ.7376 -ஆக உயர்வு.! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
Chennai Power Shutdown: சென்னைல செவ்வாய் கிழமை(20.01.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னைல செவ்வாய் கிழமை(20.01.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Embed widget