மேலும் அறிய

வீடு , மனை வாங்க போறீங்களா !! பத்திரத்தில் இந்த தவறுகள் இருந்தால் சிக்கல் நிச்சயம் !!

சொத்து பரிமாற்றத்திற்கு தயாரிக்கப்படும் கிரைய பத்திரத்தில் சர்வே எண் , அதில் ஏற்பட்ட மாற்றங்கள் , உட்பிரிவுகள் , நிலத்தின் வகைப்பாடு தொடர்பான விபரங்களுடன் பட்டா எண்ணும் சேர்க்கபடுவது அவசியம்

பத்திர பரிமாற்றம் விவரங்களில் கூடுதல் கவனம்

வீடு, மனை போன்ற சொத்து வாங்கும் போது பத்திரங்கள் சரியாக இருக்கிறதா, அதன் முந்தைய பரிமாற்றங்களில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்க வேண்டும். இதில் சொத்தை விற்பவர் பெயரில் பத்திரம் இருக்கிறதா என்பதை பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில் அது தொடர்பாக உங்களை அணுகும் நபர் உண்மையான உரிமையாளர் தானா என்பதை சந்தேகப்படுவதில் தவறு இல்லை. இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகம் எழுந்தால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

பட்டா விஷயத்தில் கவனம் அவசியம்

சொத்தை விற்பவரின் அடையாள ஆவணத்தில் உள்ள விபரங்கள் , பத்திரத்தில் உள்ள அடையாள விபரங்களுடன் ஒத்து போகிறதா என்று பாருங்கள். பெயர், வயது மட்டுமல்லாது , ஆதார் எண் போன்ற விபரங்களையும் துல்லியமாக பார்ப்பது அவசியம். சொத்து விற்பனையின் போது , பத்திரம் தொடர்பான விஷயங்களில் விழிப்புடன் செயல்படும் பலரும் பட்டா விஷயத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை.

ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில், அதற்கு முறையாக வருவாய் துறையால் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அந்த பட்டா சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் அமைந்துள்ளதா என்பது உள்ளிட்ட விபரங்களை தெளிவாக ஆராய வேண்டும். சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று பத்திரங்களுக்கு முந்தைய உரிமையாளர் பெயரில் அதுவும் கூட்டு பட்டா இருப்பதை ஆதாரமாக கூறுகின்றனர்.

ஏமாற்றத்துக்கான வழி

தற்போதைய உரிமையாளருக்கு தொடர்பில்லாத நபர் அல்லது நபர்கள் பெயரில் உள்ள கூட்டு பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக , இரண்டு, மூன்று பரிமாற்றங்களுக்கு முந்தைய பட்டாவை முழுமையான ஆதாரமாக ஏற்றுக் கொள்வதே ஏமாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.

ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில் அதன் தற்போதைய உரிமையாளர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அதே நேரம் தவிர்க்க முடியாத சூழலில் , பட்டாவில் பெயர் உள்ள நபரிடம் இருந்து தான் தற்போதைய உரிமையாளர் சொத்தை வாங்கியுள்ளார். பெயர் மாற்றம் மட்டுமே நிலுவை என்றால் கூட பரவாயில்லை என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டு, மூன்று நபர்களுக்கு முந்தைய நிலையில் உள்ள உரிமையாளர்கள் பெயரில் உள்ள பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது, அதன் தற்போதைய நிலவரத்தை துல்லியமாக ஆராய வேண்டும்.

பட்டா விவரங்களை கிரைய பத்திரத்தில் சேர்க்கும் போது கவனம்

தற்போது விற்கப்படும் சொத்து பாகம், அந்த பட்டாவில் தற்போதும் இருக்கிறது என்பதை உரிய ஆய்வுகள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும். இது மட்டுமல்லாது சொத்து பரிமாற்றத்துக்கு தயாரிக்கப்படும் கிரைய பத்திரத்தில் சர்வே எண், அதில் ஏற்பட்ட மாற்றங்கள், நிலத்தின் வகைப்பாடு தொடர்பான விபரங்களை குறிப்பிடுகிறோம். இத்துடன் கடைசியாக வழங்கப்பட்ட பட்டா குறித்த விபரங்களை கிரைய பத்திரத்தில் முறையாக சேர்க்க வேண்டும்.

பட்டா விபரங்களை பத்திரத்தில் ஏன் சேர்க்க வேண்டும் என்ற சந்தேகம் எழுவதில் தவறு இல்லை. உண்மையில், அந்த பத்திரத்துக்கு உரிய உண்மையான சொத்து தான் அது என்பதை உறுதி செய்ய பட்டா எண் கூடுதல் ஒரு வசதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆவண எழுத்தர்கள் அலட்சியமாக இருந்தாலும், பத்திரத்தில் பட்டா விபரங்களை சேர்ப்பதில் உறுதியாக செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள். சொத்து பரிமாற்றத்துக்கு தயாரிக்கப்படும் கிரைய பத்திரத்தில் சர்வே எண் , அதில் ஏற்பட்ட மாற்றங்கள், உட்பிரிவுகள், நிலத்தின் வகைப்பாடு தொடர்பான விபரங்களுடன், பட்டா எண்ணும் சேர்க்கப்படுவது அவசியம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
Embed widget