மேலும் அறிய

நான்காவது மனைவியின் 10 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜக பொறுப்பாளர் கைது

நடுவண் அரசின் , பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அதிகளவில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (47). பாரதிய ஜனதா கட்சியின் ஆதி திராவிடர் பிரிவின் வாணியம்பாடி நகர நிர்வாகி பதவிவகிக்கும் இவர் வாணியம்பாடி பகுதியில் ஃபைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட்  தொழில்களும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 1 ஆண் மற்றும்  1 பெண்குழந்தை இருந்த  நிலையில் முதல் மனைவி இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, 2  மகள்களையும் பாரதியிடம் ஒப்படைத்து விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார் .

நான்காவது மனைவியின் 10 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜக பொறுப்பாளர் கைது
குற்றவாளி பாரதி 

 

இரண்டாவது மனைவி பிரிந்துசென்றதால் பாரதி , மூன்றாவது திருமணம் செய்துகொண்டு, மூன்றாவது மனைவிக்கும் 2 பெண் குழந்தைகள் இருந்த நிலைமையில் , அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்றாவது மனைவியையும் கைவிட்டு, கடந்த 9 வருடங்களுக்கு முன்னதாக ஏற்கனவே திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பெண்குழந்தை உடன் வசித்து வரும் ஜீனத் என்ற பெண்மணியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை நான்காவது திருமணம் செய்து கொண்டார் குற்றவாளி பாரதி.

அவரது முதல் மூன்று மனைவிக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மற்றும் ஐந்து பெண் குழந்தைகளும் ஜீனத்தின் 11 வயது பெண் குழந்தை என மொத்தம் 7 குழந்தைகளும் ஜீனத்தின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் செவ்வாய் இரவு மதுபோதையில் இருந்த பாரதி, அவரது வளர்ப்பு  மகளான ஜீனத்தின் 11 வயது பெண்குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார் .

தூக்கத்தில் இருந்து அரண்டு எழுந்த அந்த சிறுமி அருகில் படுத்திருந்த தனது தாயிடம் நடந்ததை அழுதுகொண்டே விவரித்துள்ளார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மிகவும் ஆத்திரப்பட்ட ஜீனத் , மறுநாள் புதன்கிழமை வாணியம்பாடி அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதி மீது புகார் அளித்துள்ளார். புகாரினை விசாரித்த வாணியம்பாடி அணைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி பாரதி மீது போக்சோ உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைப்பதற்காக கொரோனா பரிசோதனை செய்ததில், அவரது பி சி ஆர் பரிசோதனை அறிக்கையில் 60  சதவீதம் கொரோனா தோற்று பாதிப்பு உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

வழக்கு பதியபட்ட நிலையில்  குற்றவாளி பாரதி போலீஸ் பாதுகாப்புடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இது தொடர்பாக நாம் வேலூர்  மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்ட பொழுது “நடுவண் அரசின் , பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அதிகளவில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 

நான்காவது மனைவியின் 10 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜக பொறுப்பாளர் கைது
குற்றவாளி பாரதி 

 

உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் உணர்வு ரீதியான அத்துமீறல் என்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வரையறுத்திருக்கும் மத்திய அரசு, தமிழகம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தேசிய அளவில் ஆறாம் இடத்தில் உள்ளதாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது .

கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் , குறிப்பாக பாலியல் சீண்டல்கள் 250 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற பதிவுகள் ஆணையம் , இதில் 95 சதவீதத்திற்கும் அதிகமான குற்றங்கள் , பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நெருங்கிய உறவினர்கள்  , பக்கத்துவீட்டார்கள் போன்றவர்களால்தான் இந்த கொடூர வன்முறைகள் அரங்கேற்றப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது”. என்று தெரிவித்த குழந்தைகள் நல அலுவலர் , குழந்தைகளுக்கு இது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு பெற்றோர்கள்தான் சற்று கவனமுடனும், எச்சிரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் சீண்டல்களை புகார் செய்ய 1098 என்ற இலவச சேவை எண்ணைத் தொடர்புகொண்டு புகார்களை தெரியப்படுத்தலாம் என்று தெரிவித்தார் .

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget