மேலும் அறிய

காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..

காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்.

அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அதிமுக பொன்விழா ஆண்டாக  தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.சோம சுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள களக்காட்டூர், ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம், தேரடி, கருக்குப்பேட்டை, வாலாஜாபாத், உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்சியின் நிறுவனர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..
இதைத்தொடர்ந்து பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அன்னதானத்தையும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன்,மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சத்தியா, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி.க. நாகராஜன், தும்பவனம் டி ஜீவானந்தம்,ராஜூ, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..

காஞ்சிபுரம்  மாவட்டம் முழுவதும் உள்ள நகர, கிராம அதிமுக கிளைக் கழகங்கள் சார்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுகவினர் பொன்விழாவை மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும்  ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் அதிமுகவின் கிளை கழகங்களில் அதிமுகவின் கட்சி கொடியேற்றி விமர்சியாக  கொண்டாடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..
அதேபோல் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் அதிமுகவின் மாவட்ட கவுன்சிலரான காஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொன்விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . அதேபோல் மாணவ மாணவிகளுக்கு நோட், புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..
அதிமுக பொன்விழா
 
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் கொண்டாட அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை  பொன்விழாவை தொடங்கி வைக்கின்றனர். நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிடுகின்றனர்.

காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..
பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக் கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Embed widget