மேலும் அறிய

“அவரது மனைவியோடு எனக்கு தொடர்பு என்றார்; ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டேன்” - சென்னை கொலையில் பரபரப்பு வாக்குமூலம்

நடத்திய விசாரணையில் என்னையும் அவரது மனைவியையும் சேர்த்து வைத்து பேசியதால் ஆத்திரத்தில் இது போன்று செய்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை உறவினரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பாபு வயது 40. இவருக்கு திருமணம் ஆகி மெர்சி (வயது 38) என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  மெர்சியின் தம்பி சீனிவாசலு என்பவரின் மகளுக்கு வருகின்ற 11ம் தேதி  திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக புளியந்தோப்பில் உள்ள ராஜேந்திர பாபு வீட்டில் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்தனர். அப்போது மெர்சியின் அக்கா ருத்ரமாவின் மருமகன் சதீஷ் (வயது 30) என்பவரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது ராஜேந்திர பாபு முழு மது போதையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சதீஷும் மது அருந்தி இருந்துள்ளார். மேலும் மெர்சிக்கும் சதீஷ்க்கும்  இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறி சண்டையிட்டு உள்ளார் ராஜேந்திர பாபு.
 
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் வீட்டின் வெளியே நின்று இருந்த ராஜேந்திர பாபுவை  தள்ளி விட்டு கீழே இருந்த கல்லை எடுத்து அவர் மீது போட்டுள்ளார். மேலும் அங்கிருந்த கத்தியால் ராஜேந்திர பாபு கழுத்து, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். ராஜேந்திரபாபு ரத்தம் சொட்ட, சொட்ட தெருமுனை வரை சென்று சுய நினைவு இல்லாமல் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் உறவினர்கள் பார்த்து மெர்சியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே உறவினர்கள் ராஜேந்திர பாபுவை மீட்டு அருகில் உள்ள  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்து  உள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து வட்டதாக தெரிவித்தனர்.
 

“அவரது மனைவியோடு எனக்கு தொடர்பு என்றார்; ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டேன்” - சென்னை கொலையில் பரபரப்பு வாக்குமூலம்
 
இதனையடுத்து இந்த தகவல் புளியந்தோப்பு போலீசாருக்கு தெரிவிக்கப் பட்டது. புளியந்தோப்பு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சதீஷுக்கும்  ராஜேந்திர பாபுவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து புளியந் தோப்பு  போலீசார் வியாசர் பாடியில்  பதுங்கியிருந்த சதீஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் என்னையும் அவரது மனைவியையும் சேர்த்து வைத்து பேசியதால் ஆத்திரத்தில் இது போன்று செய்து விட்டேன்  எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு  போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.