மேலும் அறிய

5.80 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவ ஆலோசனை – சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் தனிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மண்டலக் கட்டுபாட்டு அறையில் இருந்து தொலைபேசி வாயிலாக சுமார் 5.80 லட்சம் அழைப்புகளுக்கு மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்

சென்னையை பொருத்தவரை கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்தது. சென்னையில் உள்ள மிக முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி, ஸ்டேன்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டது. ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பின் தன்மையை அறிந்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்பையில் சிகிச்சைகளை அளிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டது. இதற்கு உறுதுணையாக சென்னை மாநகராட்சியும் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்தி அறிகுறிகளின்றி கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தொலைபேசி மூலம் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி மையத்தை தொடங்கியது. 

5.80 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவ ஆலோசனை – சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ள மண்டல கட்டுப்பாட்டு மையம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் முதற்கட்ட பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பரிசோதனைக்கு பிறகு தொற்று பாதிப்புகுறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி தனிமைப்படுத்தப்படுகிறனர். 40 வயதிற்கு கீழுள்ள நபர்கள் மாநகராட்சியில் மருத்துவ குழுவின் மூலம் வீடுகளுக்குச் சென்று காய்ச்சல், சுவாசத்தின் அளவு போன்ற பலகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

5.80 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவ ஆலோசனை – சென்னை மாநகராட்சி தகவல்

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும் தனிமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க மனநல ஆலோசனையும் வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பயிற்சி மருத்துவர்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மே மாதம் 13ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயிற்சி மருத்துவர்கள் வாயிலாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 418 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல் நிலை மற்றும் மனநலம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தொடர்ந்து ஐந்துநாட்கள் காய்ச்சல் வந்த 1,621 நபர்களுக்கும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக அறியப்பட்ட 360 நபர்களுக்கும் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு விவரம் கேட்ட 165 நபர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. உடல்நல சிரமங்கள் இருப்பதாக தெரிவித்த 260 நபர்களுக்கு உடல்நல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs CSK LIVE Score: கை நழுவிப் போகும் ஆட்டம்; விக்கெட்டுகள் வீழ்த்த  பெரும் போராட்டத்தில் சென்னை!
LSG vs CSK LIVE Score: கை நழுவிப் போகும் ஆட்டம்; விக்கெட்டுகள் வீழ்த்த பெரும் போராட்டத்தில் சென்னை!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
TN Lok Sabha Election LIVE :  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Lok Sabha Election 2024 | முடிந்தது வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைப்புLok Sabha Election 2024 | மனைவியுடன் வாக்களிக்க வந்த சீமான் முகத்தில் ஒரு தேஜஸ்..Veerappan Daughter | வாக்களிக்க வந்த வீரப்பன் மகள் வாக்குவாதம் செய்த பாமகவினர் நடந்தது என்ன?Lok Sabha Election 2024 | எந்த பட்டன் அழுத்தினாலும் பாஜகவுக்கு விழுந்த ஓட்டு?உண்மை என்ன!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs CSK LIVE Score: கை நழுவிப் போகும் ஆட்டம்; விக்கெட்டுகள் வீழ்த்த  பெரும் போராட்டத்தில் சென்னை!
LSG vs CSK LIVE Score: கை நழுவிப் போகும் ஆட்டம்; விக்கெட்டுகள் வீழ்த்த பெரும் போராட்டத்தில் சென்னை!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
TN Lok Sabha Election LIVE :  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Lok sabha Election 2024: தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவு! ஓட்டுப் போடுவதில் மாஸ் காட்டிய கள்ளக்குறிச்சி!
Lok sabha Election 2024: தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவு! ஓட்டுப் போடுவதில் மாஸ் காட்டிய கள்ளக்குறிச்சி!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன
ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன "அழகு மலராட!"
Embed widget