மேலும் அறிய

35 நபர்களை ஏற்றிச் செல்லாமல் விட்டுச் சென்ற விமானம்; சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

விமானம் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல்  பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை.

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா பயணிகள் விமானம், நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதோடு, அந்த விமானத்தில் பயணிக்க வந்த 35 பயணிகளை, விமானத்தில் ஏற்றாமல்,147 பயணிகளுடன் சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்று விட்டது.

சென்னை: ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னைக்கு இரவு 7 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 7:45 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டு செல்லும். நேற்று அந்த விமானத்தில், சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்வதற்கு 182 பயணிகள் பயணிக்க இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 4:30  மணிக்கு,  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்து விதமான சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

சூறைக்காற்று மழை

இந்த நிலையில் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், அந்த நேரத்தில் சென்னை விமான நிலையப் பகுதியில் சூறைக்காற்று மழை இருந்த  காரணத்தால், விமானம் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் விமானம் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல்  பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இனிமேல் எதுவும் செய்ய முடியாது..

இந்த நிலையில் இந்த விமானத்தில் அபுதாபிக்கு வேலைக்காக செல்லும் 5 பெண்கள் உட்பட, 35 பேர் ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர். மற்ற பயணிகள் தனியாக இருந்துள்ளனர். இதற்கு இடையே நள்ளிரவு 12 மணி ஆகியும் பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு அழைக்கவில்லை. இதை அடுத்து இந்த 35 பயணிகள், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் கவுண்டரில் போய் கேட்டபோது, உங்களோடு சேர்ந்த மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் வந்து ஏறி அமர்ந்து விட்டனர். நள்ளிரவு 12:18 மணிக்கு விமானம், சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டது. நீங்கள் இப்போது வந்து கேட்பதை ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து கேட்டிருக்க வேண்டும். இனிமேல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் போர்டிங் கேன்சல் ஆகிவிட்டது. நீங்கள் முறைப்படி ரீஃபண்ட் வாங்கிவிட்டு, மீண்டும் புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று விமான ஊழியர்கள் அலட்சியமாக கூறினர்.

பயணிகளை தேடவும் இல்லை

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானம் இரவு 7:45 க்கு போக வேண்டியது, நள்ளிரவு 12:18 மணிக்கு,  நான்கரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இந்த நான்கரை மணி நேரம் தாமதம் பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் வந்து ஏறவில்லையே? ஏன் என்று, விமான ஊழியர்கள் இந்த பயணிகளை தேடவும் இல்லை. இது பற்றி  பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளை கேட்டபோது, ஏதோ எங்கள் தரப்பிலும் தவறு நடந்து விட்டது. ஆனாலும் இனிமேல் இதில் எதுவும் எதுவும் செய்வதில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த 35 பயணிகளும் நாங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, அந்த விமான  நிறுவன உயர் அதிகாரி, சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசார் ஆகியோரிடம் புகார் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Embed widget