மேலும் அறிய

தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்த செங்கல்பட்டு.. முதலிடம் பிடித்து சாதனை.. சாதித்தது என்ன?

Chengalpattu: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வடக்கு மண்டலத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. 

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை: 

இன்று தமிழ்நாட்டின் ஆண்டு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், நேற்று மாநில திட்ட குழு சார்பில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. 

மாநில திட்டக்குழு சார்பில் இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மண்டல வாரியாக இந்த ஆய்வு அறிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல மாவட்டங்கள்

இதில் வடக்கு மண்டலத்தில், சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் என ஒன்பது மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒன்பது மாவட்டங்களில் கடந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தனி நபர் வருமானத்தில், 6,47,962 ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் உள்ளன. 

முதன்மை இடம் பிடிக்க காரணம் என்ன ?

சென்னையில் புறநகர் மாவட்டமாக செங்கல்பட்டு இருந்து வருவதால், அதிக அளவு சிப்காட், ஐடி கம்பெனிகள், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று சுற்றுலா, விவசாயம் என ஏராளமான பொருளாதார வாய்ப்புகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் குவிந்துள்ளது. 

தொடர்ந்து புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருவதால், வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்த அசத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget