மேலும் அறிய

நியூ இயர் செலிப்ரேஷன் OMR, ECR பிளான் பண்ணிட்டீங்களா? இதை தெரிஞ்சுக்கங்க..! காவல்துறை அதிரடி உத்தரவு..!

2024 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் இதன் கீழ்க்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள் கொண்டாடுவதற்காக சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பழைய மகாபலிபுரம் சாலை,  கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில்  உள்ள பல்வேறு ரெசார்ட்கள் மற்றும் ஓட்டல்களில்    சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 31.12.2023-ந் தேதி இரவு 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் இதன் கீழ்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.


>புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தும் விடுதி உரிமையாளர்கள் காவல் துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அனுமதி பெற்றிருக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பதிவு செய்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


> சம்மந்தப்பட்ட விடுதி மேலாளர்கள் தங்களிடம் முன்பதிவு செய்த விருந்தினர்கள் முன்பதிவு செய்ததற்கான ரசீதை நிகழ்ச்சிக்கு வரும் போது சோதனை சாவடியில் காண்பிக்க முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். முன்பதிவுக்கான ரசீது இல்லாத நபர்களின் வாகனங்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்க இயலாது. நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அல்லது முன்பதிவு செய்யாத நபர்களை அனுமதிக்க கூடாது.


> நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் நீச்சல் குளங்கள் இருக்கும் பட்சத்தில் அதன் மேல் மேடை அமைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நீச்சல் குளம் இருக்கும் இடத்திற்கு அருகே விருந்தினர்கள் செல்லாமல் இருக்க போதிய பாதுகாப்பு அலுவலர்களை நியமிக்கப்பட வேண்டும்.


> நிகழ்ச்சியானது குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்து 01.01.2024-ந் தேதி 01.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.


> நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதை பொருட்கள் அனுமதிக் கூடாது. விருந்தினர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மேலும் தற்காலிக ஓட்டுநர்களை போதிய அளவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.


> நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வான வேடிக்கைகள் நடத்துவது மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்துவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிக ஒலி எழுப்ப ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

> நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

> நிகழ்ச்சிக்கு வருகை தரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.

> நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்கள் கடலுக்குள் இறங்குவதை உரிய நபர்களை நியமித்து தடுத்திட வேண்டும்.

> நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீ தடுப்பான் உபகரணங்கள் இருப்பதையும் அவசர மருத்துவ சேவைக்கு மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் இருக்குமாறும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

> நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குள் வரையறுக்கப்பட்டநபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


மேற்படி விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்யவோ அல்லது காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இதன் மூலம் அறிவுறுத்தப்டுகிறது. வாகனங்களை குடித்துவிட்டு ஓட்டுதல், வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் செய்வது மற்றும் வேகமாக வாகனத்தை இயக்குவது ஆகியவை கண்டறியப்பட்டால் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  புத்தாண்டு கொண்டாடத்தின் போது பொது இடங்களில் மது அருந்துவது, கூச்சல் மற்றும் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் விதமாக நடந்துகொண்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget