செங்கல்பட்டில் வீடு கட்டுபவர்கள் இதை ஃபாலோ பண்ணுங்க... மாவட்ட ஆட்சியர் அதிரடி.. என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா ?
"செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்"

வீடு என்பது நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்ற வேண்டிய சூழல் உள்ளது. அவற்றை கவனமுடன் பின்பற்றினால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம். அந்த வகையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள் ?
மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டிடங்களுக்கு Online PPA இணையதளம் வாயிலாக முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாகும்.
ஒற்றை சாளர முறை (Single Window Portal Online PPA)
மேலும் அவற்றின் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை வருவாய்கள் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. மேற்படி மனைப்பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியினை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் 02.10.2023 முதல் தமிழ்நாடு அரசின் மூலம் ஒற்றை சாளர முறையிலான இணையதளம் (Single Window Portal Online PPA) (https://onlineppa.tn.gov.in) கொண்டு வரப்பட்டு இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
உடனடி பதிவு (self certificate)
இதன்படி 2500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில் 3500 சதுர அடி வரையிலான கட்டிட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு உடனடி பதிவின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி சுய சான்று முறையில் Online PPA இணையதளம் வாயிலாக அனுமதி (self certificate) அளிக்கப்படுகிறது.
2,500-10,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு Online PPA இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.
முழுமையான அனுமதி முக்கியம்
மேலும் 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு Online PPA இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் நகர கிராம திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) மற்றும் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி வாயிலாக ( Non self certificate) அனுமதி வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் முறையான மின்கம்பங்கள், குடிநீர் வடிகால்கள் ஆகிய அடிப்படை வசதிகள் இருத்தல் மற்றும் திறந்த வெளி நிலங்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு இருத்தல் நிறைவேற்றப்பட்டு அளிக்கப்படுகிறது. இருப்பின் இணையதளம் ஆகிய நிபந்தனைகள் வழியே அனுமதி
இவ்வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டடங்களுக்கு அனுமதி பெறுதல் சார்ந்து மேற்படி தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை அனைவரும் பின்பற்றி தங்களின் மனைப்பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியினை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றிடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





















