மேலும் அறிய

இப்படி ஒரு மாவட்ட ஆட்சியரா..! வாட்ஸ் அப்பில் வந்த மனு.. நேரில் சென்று நடவடிக்கை..

Chengalpattu : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் வாட்ஸ் ஆப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக   பட்டா மற்றும் உதவிகளை வழங்கினார்

வாட்ஸ் ஆப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்கினார்.

ஒரு சில அரசு அதிகாரிகள்..

செங்கல்பட்டு ( Chengalpattu News )  : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுத்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் உள்ளன. குறிப்பாக ஒரு சில அரசு அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாதது.  தங்கள் பணி செய்வதற்கு கையூட்டு பெறுவது,   அரசு அதிகாரிகள் என  திமிரில் நடந்து கொள்வது ஆகியவை  ஒருபுறம் நடந்தாலும்.  மறுபுறம் அரசு அதிகாரிகள் மக்களை நோக்கி  செல்லும் சம்பவங்களும் நடைபெற்று தான் வருகிறது.  

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு,  வாட்ஸப் மூலம் வந்த புகாருக்கு  நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து

செங்கல்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் என்பவரது மகன் சத்தியமூர்த்தி வயது 39. தனியார் நிறுவனத்தில்  பணியாற்றி வந்த  சத்தியமூர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது,  மழையால் ஏற்பட்டிருந்த பள்ளத்தில்   விழுந்து அவரது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்து அவரது வாழ்க்கையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள நிலையில்,  விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மனைவி கணவரை பார்த்துக் கொண்டாலும்,  குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளின் படிப்பை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், மனைவி மற்றும் குழந்தைகள் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றனர். சத்தியமூர்த்தி தாய்க்கும் வயதாகி வருவதால்,  சத்தியமூர்த்தியை முறையாக பார்த்துக் கொள்ள முடியாத சூழலில் தாய் தள்ளப்பட்டுள்ளார்.

  வாட்ஸ் அப்பில் மனு: நேரில் சென்ற ஆட்சியர்

தாயின் அரவணைப்பில் இருந்த சத்தியமூர்த்தி எனக்கு வீடு இல்லை என்றும் வீட்டு மனைபட்டா வழங்கி, வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியருக்கு  வாட்ஸ் ஆப் மூலம் கடந்த மே 27 அன்று தகவல் அளித்திருந்தார்.  இந்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதனன்று (மே 29) அதற்கு தீர்வு காணும் வகையில் சத்தியமூர்த்தியை மாவட்ட ஆட்சியர்  ச.அருண்ராஜ் நேரில் சென்று வீட்டு மனை பட்டா வழங்கி இரண்டு மாதங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டி தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தர விட்டார். மேலும் மின்சார அடுப்பு மற்றும் சமைப்பதற்கு மின்சார குக்கர் ஆகியவற்றையும் வழங்கினார். மேலும் அவருக்கு மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் ஏற்கெனவே அவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையில் சிரமத்தை சந்தித்து வருவதாகவும்,  மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உதவி செய்திருப்பதால்  தனக்கு ஆறுதல் அளித்து  இருப்பதாக தெரிவிக்கிறார் சத்தியமூர்த்தி. மாவட்ட ஆட்சியர் செய்துள்ள இந்த உதவி தனக்கு,  மிகுந்த பயன் தரும் எனவும்  மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார் சத்தியமூர்த்தி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget