மேலும் அறிய

நாடு திரும்பும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு!

கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான வசதிகளையும், எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்சஅதிபர் ரணிலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து கொடுக்குமாறு  முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான வசதிகளையும், அவருக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கும், இலங்கையில் அவரது பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவே அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் 24ஆம் தேதி கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார். 

எனினும்,  கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்  கூறப்படுகிறது.

இதேவேளை  கோத்தாபய ராஜபக்சவின் கொழும்பு மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்சவின் வீடு இருக்கும் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதிகளவான ராணுவத்தினருக்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய கோத்தபாயவின் வீடு இருக்கும் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் மட்டும் விசேஷ கண்காணிப்பில் ஈடுபடுமாறும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச வரும் 24ஆம் தேதி இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அவரது வருகை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினர் தரப்பிலோ அல்லது இலங்கை அரசு தரப்பில் இருந்தோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 அதேவேளை அவர் செப்டம்பர் மாதம் தான் இலங்கை வருவார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் திடீரென கோத்தபாய ராஜபக்சவின் வீடு இருக்கும் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

 அவர் 24 தேதி வருவார் என தகவல் வெளியானதை அடுத்து கோத்தபாயவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படலாமோ, அல்லது வீடுகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ஒரு சாரார் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வருகை தொடர்பில் அவரது செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது , ​​இன்னும் சில தினங்களில் கோத்தாபய  இலங்கை வரவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதனை முன்னாள் அதிபர் கோத்தபாய தனக்கு தெரியப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச வரும் 24ஆம் தேதி இலங்கைக்கு வர உள்ளதாக  வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடப்பட்டது.

தாய்லாந்தில் உள்ள கோத்தபாய ராஜபக்ச மனைவியின் அமெரிக்க குடியுரிமையை வைத்து அங்கு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். ஆனாலும் அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. 

அமெரிக்கா வீசா அவருக்கு கிடைப்பதில் இழுபறி நீடிப்பதாகவே கூறப்படுகிறது, இந்நிலையில் கோத்தாபய மீண்டும் இலங்கைக்கு  வருவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவே அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சட்டை இல்லாமல் ATROCITY தட்டிக்கேட்ட கனி தகாத முறையில் பேசிய திவாகர் | Big Boss 9 issue
2 லட்சம் செலவில் Bench!மாணவர்களுக்கு farewell பரிசு-அசத்திய அரசு பள்ளி ஆசிரியை | Villupuram News
‘ADVANCED STROKE NETWORK’ பக்கவாத நோய் பயமா?அப்போலோவின் புதிய முயற்சி | Apollo Advanced Stroke Network
Vijay vs Bussy Anand|போர்க்கொடி தூக்கிய Virtual Warriorsபுஸ்ஸி ஆனந்துக்கு செக்அதிரடி காட்டும் விஜய்
சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
நாமக்கல் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள் பலி? வைரலாகும் பதிவுகள்- உண்மை என்ன?
நாமக்கல் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள் பலி? வைரலாகும் பதிவுகள்- உண்மை என்ன?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Joy Crizildaa Vs Rangaraj: ஒரு மாசத்துக்கு இவ்வளவு ஜீவனாம்சமா.?! மாதம்பட்டி ரங்கராஜை அலறவிட்ட ஜாய் கிரிசில்டா.! - வழக்கு
ஒரு மாசத்துக்கு இவ்வளவு ஜீவனாம்சமா.?! மாதம்பட்டி ரங்கராஜை அலறவிட்ட ஜாய் கிரிசில்டா.! - வழக்கு
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
Embed widget