மேலும் அறிய

''மானிய விலை இடுபொருள் கேட்டா.. அங்கேயும் லஞ்சம் கேக்றாங்க'' - புலம்பும் டெல்டா விவசாயிகள்!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் முழு மானியத்தில் இடுபொருள் பெறுவதற்கு ரூ 300 லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

மானிய விலையில் இடு பொருட்கள் வழங்க ரூ.300 லஞ்சம் கேட்பதாக வேளாண் அலுவலர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
 
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது வரை 89 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பிலும் 61 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு இடுபொருட்களை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
 
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.  இதில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு இரண்டு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ், உள்ளிட்டவை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது, இதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 700 விவசாயிகள் இந்த  திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதில் 30 ஆயிரம் விவசாயிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மானிய விலை இடுபொருள் கேட்டா.. அங்கேயும் லஞ்சம் கேக்றாங்க'' - புலம்பும் டெல்டா விவசாயிகள்!
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் முழு மானியத்தில் இடுபொருள் பெறுவதற்கு ரூ 300 லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகளிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் இரண்டு மூட்டை  உரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா மற்றும் அடங்கல் சான்று பெற்றுக் கொடுத்தாலும் அதனை உடனடியாக பதிவு செய்துகொண்டு இடுபொருட்களை வழங்காமல், வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் சாக்குபோக்கு கூறி வருகின்றனர். மாறாக ரூ 300 லஞ்சம் கொடுக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக பதிவு செய்து இடுபொருட்களை வழங்குகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்றைய தினம் கூத்தாநல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு காத்துக்கிடந்ததோடு லஞ்சம் கேட்கும் வேளாண் அலுவலர்கள் குறித்து குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

'மானிய விலை இடுபொருள் கேட்டா.. அங்கேயும் லஞ்சம் கேக்றாங்க'' - புலம்பும் டெல்டா விவசாயிகள்!
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக்குமாரிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரம் உள்ளிட்ட இடு பொருள்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது, அதனை நாங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி வருகிறோம். ஒரு சில இடங்களில் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு இடுபொருட்கள் வழங்குவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. அதுபோன்று வேளாண் அலுவலர்கள் லஞ்சம் கேட்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Israel Iran War: தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்; பள்ளிகள் ஆண்டு இறுதி வரை மூடல்! மாணவர்கள் அதிர்ச்சி!
Israel Iran War: தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்; பள்ளிகள் ஆண்டு இறுதி வரை மூடல்! மாணவர்கள் அதிர்ச்சி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி
Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி
Israel Iran War: பிரதமர் அலுவலகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் - நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா? - அவரின் கதி என்ன?
பிரதமர் அலுவலகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் - நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா? - அவரின் கதி என்ன?
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget