மேலும் அறிய

National Nutrition Week : தேசிய சத்துணவு வாரம் : ஆரோக்கியமான உணவுகள் பற்றி என்னென்ன தெரியும்?

ஒரு கப் கீரை டயட்டில் இடம் பெறுவது தினசரி வைட்டமின் ஏ தேவைகளில் 56 சதவீதத்தையும், வைட்டமின் கே தேவையையும் பூர்த்தி செய்கிறது.

தேசிய ஊட்டச்சத்து வாரத்தில் நமது உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளை சரியாக எடுத்துக் கொள்வதோடு, சுவைகளை கொண்டாடும்  உலகத்தை சமைப்போம்.

செப்டம்பர் 1 தேதியிலிருந்து 7 தேதி வரையிலும் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இப்படியான நிகழ்வுகள் கடைபிடிக்கப்படும் பொழுது, ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த ஊட்டச்சத்து வாரமானது கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த வருடத்திற்கு சுவைகளை கொண்டாடும் உலகத்தை சமைப்போம் என்பது கருப்பொருளாக இருக்கிறது. இதன் மூலம் அரசனது மக்களிடம் ஊட்டச்சத்தின் அவசியத்தையும், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதை பற்றியும் விழிப்புணர்வை கொண்டு சேர்க்க இத்தகைய நிகழ்வுகளை பின்பற்றுகிறார்கள்.

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022 ன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம். தேசிய ஊட்டச்சத்து வாரம் 1975 ஆம் ஆண்டில் அமெரிக்க உணவுமுறை சங்கத்தின் (ADA) உறுப்பினர்களால் நிறுவப்பட்டது, இப்போது அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா 1982 ஆம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இதைப்பற்றி சமூக வலைதளங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஓடும் பொழுது இதை வெறும் செய்தியாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளாமல்,நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சமச்சீர் உணவை எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி நாம் அவசியம் சிந்திக்க வேண்டும்.

பைந்தமிழர் வாழ்க்கை முறையில் உணவே மருந்து என்ற முதுமொழி இடம் பெற்றிருக்கும்.ஆகையால் அனைத்து சத்துக்களும் நிரம்பிய சமச்சீர் உணவை உட்கொள்வதன் மூலம் 99 சதவீத நோய்களிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

உடலுக்கு மிக அவசியமான புரதம் ஒரு மனிதனுக்கு சராசரியாக கலோரி தேவையில் 10 முதல் 35 சதவீதம் ஆனது புரதத்தின் மூலம் கிடைக்கப்பட வேண்டும். சராசரியாக 60 கிலோ எடையுள்ள இந்திய ஆணுக்கு 60 கிராம் புரதமும் 55 கிலோ எடையுள்ள இந்திய பெண்ணிற்கு 55 கிராம் புரதமும் தினமும் கண்டிப்பாக தேவை. ஆகவே இந்த புரதத்தை இறைச்சி பால் முட்டை தயிர் சிறுதானியங்கள் முளைகட்டிய பயிறு வகைகள் கீரைகள் காய்கறிகள் ஆகியவற்றின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். கீரைகளில் புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளில் கீரைகளும் அடக்கம். ஒரு கப் கீரை உங்கள் டயட்டில் இடம் பெறுவது உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளில் 56 சதவீதத்தையும், உங்கள் முழு தினசரி வைட்டமின் கே தேவையையும் பூர்த்தி செய்கிறது.

இதே போலவே காய்கறிகளில் கேரட் ,அவரைக்காய், கத்தரிக்காய்,வெண்டைக்காய், புடலங்காய்,பூசணிக்காய், பீர்க்கங்காய்,பீட்ரூட்,வைட்டமின் சி , கே மற்றும் ஏ உள்ளிட்டதையும் ஆக்சிஜன் நெற்றிகள் மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் காணப்படுகிறது. மேலும் மாங்கனீஸ், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் செலினியம் நிறைந்து காணப்படுகிறது.

இதைப் போலவே சிறுதானியங்களில் கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவை மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை பண்பை கொண்டிருப்பதோடு மட்டுமின்றி  புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. கொண்டைக்கடலை,வேர்க்கடலை , கருப்பு கொண்டைக்கடலை, பச்சை பயறு, துவரம் பருப்பு, அவரை விதைகள்,பூசணி விதைகள்,  பீன்ஸ் விதைகள்,எனப்படும் இத்தகைய பயிறு வகைகளில்  தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதையெல்லாம் கணித்து என்னவோ இந்திய உணவு வகைகளில் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகளில் காலையில் சிறுதானியங்களைக் கொண்ட கேழ்வரகு மற்றும் கம்பை கொண்ட கலி அல்லது கூழ் போன்ற உணவு வகைகள் இன்றளவும் தமிழக இல்லங்களில் சிறப்பிக்கின்றன

அப்படி இல்லையெனில் பிரதம் நிறைந்த உளுந்து சேர்த்த இட்டலி அல்லது பாசிப்பயறு சேர்த்த பொங்கல் போன்றவைகளும் மாற்றாக நம் உணவில் உள்ளன. மதிய வேலைகளில் நம் வீடுகளில் ஒரு கீரை ஒரு காய்கறியிலான கூட்டு கடலை அல்லது துவரை பருப்பை கொண்ட சாம்பார் என அரிசியின் கார்போ ஐக்கியத்துடன் சேர்ந்து நமக்கு கிடைக்கும் விதத்தில் நமது பழந்தமிழரின் உணவு பழக்கமானது இருந்திருக்கிறது. ஆகையால் இத்தகைய உணவு எல்லாம் விடுபட்டுப் போனவர்கள மேற் சொன்ன உணவுப் பொருட்களை எல்லாம் தினம் தோறும் நம் உணவில் சேர்த்துக் கொண்டு நம்மையும் நம் குடும்பத்தையும் ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்து சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget