மேலும் அறிய

Madurai Kari Dosai : மணக்க மணக்க மதுரை கறி தோசை வீட்டிலேயே சாப்பிடணுமா..? இதுதாங்க ரெசிபி

Madurai Kari Dosai : கறி தோசை அப்படிச் சொன்னவுடன் நினைவில் வருவது மதுரை தானே. ஆம் சரியாகத்தான் உங்கள் நினைவு உங்களை கூட்டிச் செல்கிறது.

கறி தோசை அப்படிச் சொன்னவுடன் நினைவில் வருவது மதுரை தானே. ஆம் சரியாகத்தான் உங்கள் நினைவு உங்களை கூட்டிச் செல்கிறது. ஆரம்பத்தில் ஒரு கடை மட்டுமே அந்த டிஷ்ஷை உரிமை கொண்டாடிக் கொண்டிருக்க இப்போது மதுரையில் ரோட்டோரம் இருக்கும் சிறு கடையில் கூட கறி தோசை ரெஸிபி வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் வெளியூர்களில் மதுர கறி தோசை என கடை பெயர் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். மதுரை மல்லி, மதுரை ஜிகர்தண்டா, மதுரை புரோட்டா சால்னா வரிசையில் இப்போது இந்த கறி தோசையும் சேர்ந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.

இந்த கறி தோசையை எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?

மட்டன் கொத்து கறி - 200 கிராம்

தோசை மாவு 

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

முட்டை - 3

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு,- அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் கொத்துக்கறியை நன்றாக அலசிக் கொள்ளவும். பின்னர் அந்தக் கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக வெந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அடுத்தக்கட்டத்திற்குச் செல்லவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, முட்டையை அடித்து வைக்கவும். இந்தக் கலவையில் உப்பு சேர்க்க வேண்டாம். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும். அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும். 

மசாலா தயாராகிவிட்டது. இப்போது தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும். அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு மேல் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை இறக்கி பறிமாறலாம்.

கீழே தோசை அப்புறம் முட்டை மேலே கொத்தக்கறி கூட்டு அதற்கும் மேல் தோசை என அட அட அட பீட்சாவெல்லாம் எதுக்குங்க... விட்டுத்தள்ளுங்க கறி தோசா ட்ரை பண்ணுங்க

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
India Vs Pakistan :
India Vs Pakistan : "இந்தியா எல்லைக்குள்ளா வர்றீங்க?” பாக். லாகூரில் தாக்குதலை தொடங்கியது இந்திய படை..!
ஜம்முவை நோக்கி வரும் பாகிஸ்தான் ட்ரோன்கள்.. தாக்கி அழித்த இந்தியா.. மிரட்டலா இருக்கே! 
மிரட்டலா இருக்கே! ஜம்முவுக்கு குறி.. வானில் பறக்கும் ட்ரோன்கள்.. அசால்ட் காட்டும் இந்தியா
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhitaபதிலடியா? பீகார் தேர்தல் உத்தியா?”தீவிரவாதத்துக்கு பொறுப்பு மோடி?”நெருக்கும் எதிர்க்கட்சிகள் | india attack pakistanPAK-ஐ கதறவிட்ட சிங்கப்பெண்கள்! Operation Sindoor HEROINES யார் இந்த சோபியா & வியோமிகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
India Vs Pakistan :
India Vs Pakistan : "இந்தியா எல்லைக்குள்ளா வர்றீங்க?” பாக். லாகூரில் தாக்குதலை தொடங்கியது இந்திய படை..!
ஜம்முவை நோக்கி வரும் பாகிஸ்தான் ட்ரோன்கள்.. தாக்கி அழித்த இந்தியா.. மிரட்டலா இருக்கே! 
மிரட்டலா இருக்கே! ஜம்முவுக்கு குறி.. வானில் பறக்கும் ட்ரோன்கள்.. அசால்ட் காட்டும் இந்தியா
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா.. பாகிஸ்தான் செயலால் ஷாக்
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா
Duraimurugan : ”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..? முழு பின்னணி..!
”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..?
Defence Ministry Explanation: இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
"போர் வேணாம்" இந்திய, பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கி தவிக்கும் கிராமங்கள்
Embed widget