மேலும் அறிய

Health: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் ஐந்து உணவு வகைகள் உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது.

உயர்ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் ஐந்து உணவு வகைகள்
உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது.

ரத்த அழுத்தம்:

ரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் என்பது எப்போதுமே நம் ரத்த அழுத்தத்தின் அளவு 140/90 என்றளவில் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம் தனிப்பட்ட ஒரு நோயாக கவனம் பெறுவதைவிட அதனால் மாரடைப்பு ஏற்படலாம், பக்கவாதம் ஏற்படலாம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம் என்பதனால் அதிக கவனம் பெறுகிறது. உலகில் 113 கோடி மக்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம். அதிலும், இந்த நோயை ஐந்தில் ஒருவர்தான் சரியாக கவனிக்கின்றனர் என்றும், மீதமுள்ளோர் கடும் அபாயத்தில் உள்ளதாகவும் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.

சைலன்ட் கில்லர்:

இதில் இன்னொரு கவலை கொள்ளும் விஷயம் என்னவென்றால் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்படுகிறது. சரி, உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? என்று பார்ப்போம். 
அதிக மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை ஆகியனவையே உயர் ரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கின்றன. 

இந்த தவறான பழக்கவழக்கங்கள் கூடாது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக உயர் ரத்த அழுத்த தினமானது மே 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் நிகழும் அகால மரணங்களுக்கு பெரும் காரணமாக இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 1.13 பில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கையாள்வது?

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் வாழ்க்கை முறையையும் மாற்றியமைப்பது முக்கியம். அதில் உங்கள் அன்றாட உணவுப் பழக்கங்களும் அடங்கும். அதேபோல் மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை கைவிடுவது சிறந்தது.

நிபுணர்கள் பலரும், உப்பைக் குறைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். பொட்டாசியம் சீராக உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக் கூடிய 5 உணவு வகைகளைப் பார்ப்போம்:

1. செம்பருத்தி தேநீர்

செம்பருத்தி தேநீரில் ஆந்தோசயனின் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கிறது. இது ரத்த நாளங்கள் சுருங்குவதை தடுக்கிறது. அதனால் செம்பருத்தி தேநீர் அருந்தலாம். 

2. பச்சைக் காய்கறிகள், கீரைகள்

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இதனால் இவை சோடியத்தின் எதிர்வினைகளை மட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. தக்காளி, உருளைக் கிழங்கு, பீட் ரூட், காளான், வெள்ளைப் பூண்டு, சக்கரவல்லிக் கிழங்கு ஆகியன சிறந்த உணவாக அமையும். பூண்டு ரத்த நாளங்களை ரிலாக்ஸ் ஆக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.  அதனால் அன்றாடம் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்,

3. பயறு மற்றும் பருப்பு வகைகள்

பீன்ஸ், தானியங்கள் மற்றும் பயறு வகைகள் புரதமும், நார்ச்சத்தும் நிறைந்தவை. அவற்றில் மற்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன. அதனால் அவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

 4. நட்ஸ்

உலர் கொட்டை வகைகளான பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவை பொட்டாசியம், மக்னீஸியம் ஆகியன நிறைந்தவை. இவையும், நட்ஸில் தாராளமாக உள்ள நார்ச்சத்து அனைத்துமே ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

5. முழு தானியங்கள்

ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள் பீட்டா குளுகான், நார்ச்சத்து நிறைந்தவை. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நலனை பாதுகாக்கவும் உதவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!
Watch Video: சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
சிவகங்கை லாக்கப் மரணம்; போலீசின் போலி எஃப்.ஐ.ஆர்... சிபிஐக்கு மாற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சிவகங்கை லாக்கப் மரணம்; போலீசின் போலி எஃப்.ஐ.ஆர்... சிபிஐக்கு மாற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
Embed widget