மேலும் அறிய

Emotional Eating : பசியே இல்லாதபோதும் சாப்பிடுறீங்களா? இதுதான் உங்க பிரச்சனை.. கவனம் மக்களே..

பசி இல்லாத போது அல்லது வெறுமையாக உணரும் சமயங்களில், அடிக்கடி உணவை உண்பதன் மூலம், உடல் அல்லது மனம் சார்ந்த ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவு,தனிப்பட்ட விருப்பமாக இருக்கும்.சிலருக்கு பிரியாணி,சிலருக்கு பணியாரம், சிலருக்கு நொறுக்கு தீனிகள், சிலருக்கு ஐஸ்கிரீம் என ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தை பொறுத்து இந்த உணவு இருக்கும்.

இப்படியான உணவுகள் விருப்பத்தின் பேரில் இருப்பது தவறில்லை. ஆனாலும்,பசியே இல்லாத நேரத்தில் இத்தகைய உணவுகளை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது,நம்முடைய உடல் நலம்  மனநலம் ஆகிய இரண்டுமே வெகுவாக பாதிக்கப்படும்.இப்படி அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருக்கும் போது,உடல் பருமன் ரத்த அழுத்தம்,நீரிழிவு மற்றும் மனம் சார்ந்த குழப்பம்,சோர்வு போன்றவை  நம்மை வந்து தொற்றிக் கொள்ளும். இப்படியாக பசி இல்லாத போது அல்லது வெறுமையாக உணரும் சமயங்களில்,நாம் அடிக்கடி இவ்வாறு உணவை உண்பதன் மூலம், நம்முடைய உடல் அல்லது மனம் சார்ந்த ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, உணவு சாப்பிட்டுக் கொண்டே இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நாம் காணும்போது, நீண்ட காலமாக உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்,மன சார்ந்த அழுத்தம், சலிப்பு அல்லது விரக்தியில்  இருப்பவர்கள்,வேலைப்பளுவின் காரணமாக இருப்பவர்கள்,அதிகப்படியான பண பிரச்சனையில்  இருப்பவர்கள் மற்றும் உறவுகளுக்கு இடையே பிரச்சனைகள் இருப்பவர்கள் ஆகியோர் இவ்வாறு சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனவிரக்தி மற்றும் சலிப்பை தவிருங்கள்:

பசி இல்லாத நேரங்களில் கூட உணவை உட்கொள்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மனவிரக்தி மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பு.
இதனால் நம் வயதுக்கும்,நம்முடைய வயிற்றின் அளவுக்கும் மீறி, உணவுகளை நிறைய சாப்பிட்டு, பல வியாதிகளுக்கு ஆளாகிறோம்.

வள்ளுவரின் கூற்றுப்படி,
"நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்ப செயல்" என்னும் திருக்குறளுக்கு இணங்க மன விரக்தி மற்றும் சலிப்பினால் உணவினை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது,உணவு சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதை விட,மன அழுத்தம் மற்றும் சலிப்பில் இருந்து விடுபடுவதற்கு நல்ல இசையை கேட்பது,ஏதாவது ஒரு விளையாட்டில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது,உடற்பயிற்சி செய்வது, அல்லது உங்கள் விருப்பத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கை செய்வது என்பதன் மூலம் சலிப்பில் இருந்தும் விரக்தியிலிருந்தும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தும் வெளிவரலாம்.இதன் மூலம் உணர்ச்சியின் காரணமாக சாப்பிடும் உணவுப் பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

பழக்கத்தின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தவிருங்கள்:

பொதுவாக வேலைகளுக்கு இடையில்  நம்மில் ஒரு சிலர் அதிகப்படியான தேநீர் அல்லது காபி குடிப்பதை பார்த்திருப்போம். சிலர் யார் வந்து அழைத்தாலும் அவர்களோடு வெளியில் சென்று ஒரு தேநீரை குடிப்பார்கள்,இப்படியாக பழக்கத்தில் சார்ந்து இருக்கும் இத்தகைய உட்கொள்ளலை, உங்களை நீங்களே,கவனிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.

அதிகப்படியான வேலை பளுவை தவிருங்கள்:

இன்றைய அழுத்தம் மிகுந்த வாழ்க்கை சூழலில்,பணத்தேவை என்பது, அனைவருக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு தலையாய பிரச்சனையாகும்.இதன் பொருட்டு நம் வலிமைக்கு மீறிய,வேலைகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்.ஆகவே இதிலிருந்து விடுபட,நீங்கள், உங்கள் வாழ்க்கை முறையை ஒருமுறை சீர்தூக்கி பார்த்து,செலவுகளை கட்டுக்குள் கொண்டு வந்து,அதற்கு தகுந்தார் போல்,வேலையை குறைத்துக் கொள்ளுங்கள்.இதன் மூலமும் உணர்வு தூண்டுதலால் சாப்பிடும்,உணவு பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்.

கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யுங்கள்:

பழக்கத்தின் காரணமாகவும், உணர்ச்சி தூண்டுதலாலும் அதிகப்படியாக உண்ணும் மனநலையில் உள்ளவர்கள், கண்டிப்பாக,ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை தினமும் பயிற்சி செய்யுங்கள்.இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,மனதையும் எளிதாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவும்.இப்படியாக மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம்  உணர்ச்சி மற்றும் பழக்கத்தில் காரணமாக உணவு உண்ணுவதில் இருந்து வெளி வரலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
வீட்டிலேயே சுவையான உலர் திராட்சை தயாரிப்பது எப்படி? ஒரு கிலோ தயாரிக்க எவ்வளவு திராட்சை தேவை? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வீட்டிலேயே சுவையான உலர் திராட்சை தயாரிப்பது எப்படி? ஒரு கிலோ தயாரிக்க எவ்வளவு திராட்சை தேவை? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடை உரிமையாளரின் உருக்கமான வேண்டுகோள்! விலை உயர்வு குறித்து கேள்வி கேட்காதீர்!
சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடை உரிமையாளரின் உருக்கமான வேண்டுகோள்! விலை உயர்வு குறித்து கேள்வி கேட்காதீர்!
உணவுப் பொருட்களின் விலை உயர்வு: சிக்கனமான சமையல் & உணவு வீணாவதை தடுக்கும் 5 வழிகள்!
உணவுப் பொருட்களின் விலை உயர்வு: சிக்கனமான சமையல் & உணவு வீணாவதை தடுக்கும் 5 வழிகள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget