![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பப்பாளிக் காயில் என்ன நலன் இருக்கு? : ஆய்வு சொல்லும் தகவல்
உடல் நலத்துக்கு இயற்கையாகவே ஊட்டம் அளிக்கும் பழங்களை அமிழ்தம் எனலாம். அந்த வகையில் பப்பாளி பழத்தை தினமும் உண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
![பப்பாளிக் காயில் என்ன நலன் இருக்கு? : ஆய்வு சொல்லும் தகவல் Did you know raw papaya juice helps in lowering high cholesterol? Know its other nutritional benefits பப்பாளிக் காயில் என்ன நலன் இருக்கு? : ஆய்வு சொல்லும் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/28/0a67149b715ae634f81d3d2caa6b4a711674914688858109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உடல் நலத்துக்கு இயற்கையாகவே ஊட்டம் அளிக்கும் பழங்களை அமிழ்தம் எனலாம். அந்த வகையில் பப்பாளி பழத்தை தினமும் உண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனைகளும் சரியாகிறது. இதே குணநலன் பப்பாளிக் காயிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பப்பாளியில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி-குடும்பம், ஃபோலேட் (வைட்டமின் பி 9) உட்பட ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
இது மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், மிதமான அளவில் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாகும். இது திடீரென சர்க்கரை அளவை. மேலும் குடலுக்கு நல்லது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் நிறைந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதிக அளவிலான ஹோமோசைஸ்டீன் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கிறது.பப்பாளியில் உள்ள ஃபோலேட் இரத்த ஓட்டத்தில் ஹோமோசைஸ்டீனை கட்டுப்படுத்த உதவுகிறது.
பப்பாளியை தொடர்ச்சியாக உண்பதினால் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ அதிகரித்து உங்கள் நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்தும். காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தொற்று, சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றைத் தவிர்க்க ஒருவர் விரும்பினால் பப்பாளியை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிந்தாலும், அவற்றில் கணிசமான அளவு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. எனவே, பப்பாளியின் தினசரி உண்பதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
பப்பாளியில் உள்ள என்சைம்கள் - பப்பைன் மற்றும் சைமோபபைன் - நாம் உண்ணும் புரதத்தை அமினோ அமிலங்களாக உடைக்க உதவுகிறது. இது வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. செரிக்கப்படாத புரதம் நமது குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. உண்மையில், நம் உணவில் உள்ள புரதம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அது நீண்ட காலத்திற்கு கீல்வாதம், நாள்பட்ட மலச்சிக்கல், பைல்ஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சிக்கல்கள் யாவையும் இந்த பப்பாளி பழம் தீர்த்து வைக்கிறது.
பப்பாளியில் உள்ள ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகியவை இயற்கையாகவே உடல் இயக்கம் தொடர்பான நோய்களைக் குறைக்கிறது. எனவே, இந்த சிக்கலை எதிர்கொள்பவர்கள், பப்பாளியை தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்துவதன் மூலம், இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)