மேலும் அறிய

Navratri : 700 ஆண்டுகால பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி.. துர்க்கை கோவில் நிர்வாகம் செய்த அதிரடி..

பேகுசாராய் துர்க்கை அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மிருகங்களை பலியாக கொடுக்கும் சம்பிரதாய பழக்கவழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பேகுசராய் துர்கா கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலுக்கு என்று தனித்துவமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நவராத்திரி முதல் பேகுசராய் துர்கா கோயிலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக அக்கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

அதாவது இந்த துர்க்கை அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மிருகங்களை பலியிடும் சம்பிரதாய பழக்கவழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேகுசாராய்  கோவிலில் துர்க்கை பூஜையை ஒட்டி ஆண்டுதோறும் சுமார் 10,000 விலங்குகள் பலியிடப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இங்கு பக்தர்கள் தமது வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில், இந்த விலங்குகளை பலியிட்டு காணிக்கையாக்குவதாக சொல்லப்படுகிறது.
 
வழக்கம்போல பிஹாரில் உள்ள பேகுசராய் துர்கா தேவியின் பக்தர்கள் நவராத்திரியை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். இருந்தபோதும் அதன் சம்பிரதாய பழக்க வழக்கங்களில், அக்கோயில் நிர்வாகத்தினர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்

பேகுசாராய் மாவட்டத்திலிருந்து சுமார் 33 கிமீ தொலைவில் , லகான்பூரில் உள்ள துர்கா கோயில், மாவட்டத்தில் இருக்கும் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.  இந்த கோவிலில் பக்தர்களின் விருப்பத்திற்காக மிருக பலி கொடுக்கப்பட்ட வரலாற்று கதைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, இங்கு 700 ஆண்டு பழமையான மிருக பலி பாரம்பரியம் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .தற்போது பேகுசராய் துர்க்கை அம்மனுக்கு  விலங்குகளுக்கு பதிலாக,  பூசணி, கரும்பு போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் படையல் வைக்கிறார்கள்

முதல் முறையாக இந்த ஊருக்கு வரும் பக்தர்கள்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது .அதேபோல் துர்கா தேவியை தரிசனம் செய்ய ,கோவிலுக்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். பேகுசராய் மட்டுமின்றி, பீகார், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இங்கு வந்து வேண்டுதல்களை முன்வைத்துச் செல்கின்றனர்.  சமீபத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்  இந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்து ஆசி பெற்று சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பேகுசராய் துர்க்கை அம்மன் கோவில் ஸ்தாபிக்கப்பட்ட அன்றிலிருந்தே இந்த விலங்குகளை பலியிடும் வழக்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது. துர்கா பூஜையின்போது, ​​பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 விலங்குகள் பலிகொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நவராத்திரி முதல் விலங்குகளை பலியிடும் வழக்கம் முழுவதுமாக ஒழிக்கப்படும் என அந்தக் கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பொதுவாக வட மாநிலங்களில் மிருகவதை தடைச் சட்டம் அமலில் இருப்பதாலும், மிருகங்களை கொல்வது பாவம் என்ற அடிப்படையில் ,இந்த பாரம்பரிய வழக்கமான மிருக பலி கொடுப்பது துர்க்கை அம்மன் கோவிலில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது துர்க்கா தேவி கோவிலில் விலங்குகளுக்கு பதிலாக,  பூசணி, கரும்பு போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை படையலாக வைக்க பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேகுசராய் உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, இது துர்கா சக்திபீடம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

700 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் உள்ள நதியா என்ற இடத்திலிருந்து குல்தேவி என்ற பெயரில் ,துர்க்கை சிலை கொண்டுவரப்பட்டு லக்கன்பூரில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துர்க்கை அம்மன் கோவிலில் வழிபாட்டு முறை என்பது பெங்காலி பாரம்பரிய வழக்கப்படி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரின் பேகுசாராய் நகரில் உள்ள வங்காள சமூக மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே துர்க்கை அம்மன் கோவில் இதுவாகும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget