மேலும் அறிய

Diabetes: 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேருக்கு நீரிழிவு பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Diabetes: உலகில்  2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில்  2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீரிழிவு பாதிப்பு குறித்த ஆய்வு கட்டுரை ஒன்று (Lancet) லான்செட் இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், 1.3 பில்லியன் மக்கள் அதாவது மொத்த மக்கள்தொகையில் 13.4 சதவீதம் மக்கள் 2050-ம் ஆண்டிற்குள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டு நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021- ம் ஆண்டு 6.7% ஆக இருந்த எண்ணிக்கை இன்னும் 27 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 6.7 % -ஆக இருந்த விகிதம் 13.4% ஆக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நீரிழிவு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் வரும் 30 ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பு குறைய வாய்ப்பில்லை என்று எச்சரித்துள்ளது. 

மற்றோரு ஆய்வு இதழில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தொற்றாத நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பத்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர கண்காணிப்பு தேவைப்படும் நிலையும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நீரிழிவு பாதிப்பு அதிகரித்தது. நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரித்து உயிரிழிக்கும் ஆபத்திருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Albert Einstein College of Medicine and Montefiore Health System என்ற நிறுவனத்தை சேர்ந்தவரும், ஆய்வு கட்டுரையின் எழுத்தாளருமான ஷிவானி அகர்வால் தெரிவிக்கையில், “நீரிழிவு உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. சுகாதார கட்டமைப்பு, திட்டங்களுக்கு மிகவும் சவால் மிகுந்ததாகவும் நீரிழிவு பாதிப்பின் எண்ணிக்கை உயர்வு விளங்குகிறது.” என்று தெரிவித்தார். 

உலக நாடுகள் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம்

கேரட் - இதில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய் ஆகும். இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த கார்போஹைட்ரெட் கொண்ட உணவாகும். நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. இதை நீரிழிவு நோயாளிகள் அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம். இயற்கையிலே இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் பச்சையாகவோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.

ப்ரோக்கோலி - இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு அட்டவணையில் இதை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குழாயில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.இதில் இருக்கும் சல்போராபேன் எனும் கலவை சல்போராபேன் என்சைம்களை உருவாக்குகிறது. இது இரத்த நாளங்களை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இதை சூப் ஆகவோ, வேக வைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.

கீரை - நீரிழிவு நோயாளிகள் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2  என இரண்டு வகை சர்க்கரை நோயாளிகளும் கீரையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கீரையில் கிளைசெமிக் குறியீடு  குறைவாக உள்ளது. கீரை சூப் பொரியல், கூட்டு, சாதம் என ஏதேனும் ஒரு வகையில் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை அன்றாட உணவில் எடுத்து கொள்வதால்,இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வெள்ளரிக்காயை சாலட் ஆகவோ, பச்சையாகவோ எடுத்து கொள்ளலாம்.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Embed widget