மேலும் அறிய

2014 -2019 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரெனியூவல் செய்யவில்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு!

கடந்த 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறிய பதிவுத்தாரர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியைப் பயன்படுத்தி பதிவுதாரர்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளலாம் .

தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 2019 , அதாவது கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரெனியூவல் செய்யாதவர்கள் உடனடியாக ஆன்லைன் அல்லது பதிவஞ்சல் மூலமாக  புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தாலே… உங்களுக்கு எங்க வேலை என்று தான் முதலில் அனைவரும் கேட்பார்கள். அந்தளவிற்கு அரசுப்பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை மட்டும் தான் மக்கள் நம்பியிருந்தக் காலங்கள் உண்டு. அதற்கேற்றால் போல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு முதல் எத்தனை டிகிரி முடித்திருந்தாலும் அதனைப்பதிவு செய்து வைத்துக்கொண்டால் சீனியாரிட்டி அடிப்படையில் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் இந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கானத் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். இருந்தப்போதும் சில பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. மேலும் அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் இதனையெல்லாம் பெறுவதற்கு  முன்னதாக,  நாம் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நம்முடைய ஆவணங்களை அனைத்தையும் புதுப்பித்திருக்க வேண்டும்.

2014 -2019 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரெனியூவல் செய்யவில்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு!

ஆனால் சில சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறும் சூழல் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கான ஒர் அரிய வாய்ப்பைத்தான் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி 2014, 2015, 2016, 2017, 2018, 2019 காலக்கட்டத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசுப்பணி கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்படும். அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இவர்களுக்காகவே மற்றொரு வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முதல்  சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2014 முதல்  2019  ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்க தவறிகள் மீண்டும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இதற்காக கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய சிறப்பு புதுப்பித்தல் முகாம் மார்ச் 1 ஆம் தேதி வரை 3 மாதத்திற்கு நடைபெறுகிறது. எனவே இதனைப்பயன்படுத்தி கடந்த 2014 முதல் 2019 வரை புதுப்பிக்கத் தவறிய பதிவுத்தாரர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியைப்பயன்படுத்தி பதிவுதாரர்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இணையதளம் வாயிலாக பதிவு செய்யத் தெரியாதவர்கள் மேற்கண்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று  பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு சென்று தான் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் வாயிலாகவே நம்முடைய அனைத்துக் கல்வித்தகுதிகளையும் புதுப்பித்துக்கொள்ளமுடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி? நாகப்பட்டினத்தில் ஆட்சியரின் மாஸ் பிளான்!
TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி? நாகப்பட்டினத்தில் ஆட்சியரின் மாஸ் பிளான்!
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
இந்திய கடற்படை SSC அதிகாரி பணி: ரூ.1.2 லட்சம் சம்பளம், 275 காலியிடங்கள்! விபரம் இதோ..
இந்திய கடற்படை SSC அதிகாரி பணி: ரூ.1.2 லட்சம் சம்பளம், 275 காலியிடங்கள்! விபரம் இதோ..

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Embed widget