மேலும் அறிய

ஒரே நாடு.. ஒரே ரயில்வே தேர்வு - இந்தியை திணிக்கும் முயற்சியா? வலுக்கும் கண்டனங்கள்!

”16 ரயில்வே மண்டலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே தேர்வை நடத்துவது வடமாநிலத்தவர்களுக்கு தான் அதிகம் பயன் தரும். மேலும், இதில் தென் மாநிலங்களில் மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்.”

நீட் தேர்வை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமையிடம் ரயில்வே பணிகளுக்கான தேர்வை நடத்தும் பொறுப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன் படி 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களை ஒன்றாக இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையாக திகழ்ந்து வருவது ரயில்வே துறை. இதில் சுமார் 12.54 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அரசுக்கு அதிக வருவாயையும், மக்களுக்கு வேலை வாய்ப்பையும் ரயில்வே துறை வழங்கி வருகிறது. இதற்கான பணியாளர்கள், தகுதித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இந்த தேர்வை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களுக்கான சி மற்றும் டி வகை பணியாளர்கள் தேர்வை நடத்த 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள், மண்டல வாரியாக அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை, சேலம், திருச்சி மண்டலங்களுக்கு சென்னை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துகிறது. மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் மண்டலங்களுக்கு திருவனந்தபுரம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தேர்வை நடத்தி வருகிறது.


ஒரே நாடு.. ஒரே ரயில்வே தேர்வு - இந்தியை திணிக்கும் முயற்சியா? வலுக்கும் கண்டனங்கள்!

இந்த நிலையில், அனைத்து ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களையும் கலைத்துவிட்டு 16 மண்டலங்களுக்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம், அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான அறிக்கையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அமைச்சரவைக்கு மத்திய அரசின் பொருளாதார ஆலோசனைக்குழு அனுப்பி வைத்து உள்ளது. ரயில்வே அலுவலகங்களில் தேசிய தேர்வு முகமைகளுக்கான சிறிய அளவிலான டிஜிட்டல் அலுவலகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் பல்வேறு தேர்வுகள், திட்டங்களையும் மையப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில்தான் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான ரயில்வே தேர்வுகளை மையப்படுத்துகிறது மத்திய அரசு. ஏற்கனவே தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பல லட்சக்கணக்கானோர் எழுதும் ரயில்வே தேர்வுகளை தேசிய தேர்வு முகமையிடம் நடத்த சொல்வதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ரயில்வேயில் டி மற்றும் டி வகை பணியாளர்களுக்கான தேர்வுகளை ஒரே இடத்தில் நடத்தும் மத்திய அரசின் முடிவு ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சீரழிக்கும் செயல் என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் விமர்சித்து உள்ளார். “16 ரயில்வே மண்டலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே தேர்வை நடத்துவது வடமாநிலத்தவர்களுக்கு தான் அதிகம் பயன் தரும். மேலும், இதில் தென் மாநிலங்களில் மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்.” என அவர் எச்சரித்து இருக்கிறார்.

விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் வரும் சி.ஆர்.பி.எப் மற்றும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் இதே போல், தேசியளவிலான தேர்வுகளை எழுதிய இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்தான் என தெரிவித்த தேவசகாயம் ஐ.ஏ.எஸ், ”இவர்கள் தான், இந்தி தெரியாததற்காக திமுக எம்.பி. கனிமொழியிடம் இந்தியனா என கேள்வி எழுப்பியவர்கள். அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனையும் இதுபோல் தடுத்து நிறுத்தினர். நாளை ரயில்வேயிலும் இதுபோல் நிகழும்.” என அவர் எச்சரிக்கிறார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget