மேலும் அறிய

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 204 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

கரூர் தாந்தோணிமலை அரசு கலை கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார்கள்.

கரூர் மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நடைபெறும் தனியார் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் 152  நிறுவனங்கள் மூலம் 5000 பணியிடங்களை உருவாக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள்  மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வானர்களுக்கு பணி நியமண ஆணைகளை வழங்கினார்.
 

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 204 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்
 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன் அவர்கள் மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) (முகூ.பொ) கோவை கருணாகரன் ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்முகாமிற்கு 152 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.  வேலை வாய்ப்பு முகாமை பொருத்தவரை நிறைய பேர் நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்பீர்கள். அதாவது உங்களுடைய எண்ணம் உச்சபட்ச உயரிய இலக்காக இருக்க வேண்டும். அதற்காக நேரடியாக அந்த இடத்திற்கு போக முடியாது அதனால் படிப்படியாக செல்ல முயற்சிக்க வேண்டும்.
 

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 204 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்
 
 
நம்மளுடைய எதிர்பார்ப்பு நிதர்சனத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  கிடைக்கும் வாய்ப்புகளை கொண்டு நம்முடைய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு படி ஏறிய பின்பு தான் அடுத்த படி ஏற முடியும் அதை மனதில் கொண்டு கிடைக்கும் வாய்ப்பை பற்றி கொண்டு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். சின்ன வேலை சின்ன ஊதியம் இது எனக்கு வேண்டாம் என்ற மனப்பான்மையை நிறுத்த வேண்டும். வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பகுதி நேர வேலைகளாக கிடைத்த வேலைகளை செய்கிறார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ் சமுதாயம் உழைப்பின் அடையாளம் அதை மனதில் கொண்டு கிடைக்கும் வேலையை பயன்படுத்தி நமது முழு ஆற்றலை பயன்படுத்தி முன்னேற அனைவரும் உறுதியாக பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொருத்தரும் செய்யும் கூட்டு பலன் தான் பொருளாதார முன்னேற்றம் என்பதாகும் அதுதான் ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் முன்னேற்றம் ஆகும்.  நாம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக இருக்க வேண்டும் அதற்காக உழைத்து நாட்டினுடைய வளர்ச்சியும் நம்முடைய வளர்ச்சியும் ஒன்றுதான் என  உழைக்க முன்வர வேண்டும்‌ அதேபோல் வேலை அளிப்பவர்களும் பணியில் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுத்து அவர்கள் முன்னேறுவதற்கான வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் எனக்கூறி பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 204 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்
 
SBI life insurance, ஜோஸ் ஆலுகாஸ், பி.வி.ஆர் எண்டர் பிரைசஸ் உள்ளிட்ட 152 நிறுவனங்கள் கொண்டு நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 2170 நபர்களில் ஆண்கள் 926 பெண்கள் 1244 கலந்து கொண்டார்கள். அதில்  தேர்வான 204 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் ஆண்கள் 301 பெண்கள் 232 மொத்தம் 533 நபர்கள் தேர்வாகியுள்ளனர். அரசுத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு  கண்காட்சி மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget