மேலும் அறிய

EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

EPFO recruitment 2023: பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (26.04.2023) கடைசி நாள். 

85 குரூப் சி ஸ்டெனோக்ராஃபர் பணியிடங்கள், அதோடு'Social Security Assistant’ பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது. 

பணி விவரம் :

Stenographer (Group C) -185

Social Security Assistant’ -2674

மொத்த பணியிடங்கள் -2859 

கல்வித் தகுதி: 

ஸ்டெனோக்ராஃபர், Social Security Assistant 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  கம்யூட்டரில் ட்ரான்ஸ்க்ரைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு  Level-4 in the Pay Matrix-இன் படி, ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Security Assistant பணிக்கு Level-5 in the Pay Matrix-ரூ. 29, 200 முதல் ரூ.92,300 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். 

வயது வரம்பு :

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில்  அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு வழங்கப்படும். 

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு  ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்


EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

முதல்நிலைத் தேர்வு


EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். 

கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். 

மொத்தம் 800 மதிப்பெண் ஆன்லைன் எழுத்துத் தேர்வு இருக்கும். 

இதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

திறனறிவுத் தேர்வு

பத்து நிமிட டிக்டேட்சன் தேர்வு நடத்தப்படும். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் கம்யூட்டரில் டைப் செய்ய வேண்டும். இதோடு ’Transcription’ தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்:

விண்ணப்பதாரர்களின் வசதிக்கேற்றவாறு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம் :

இதற்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,மகளினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். யு.பி.ஐ., கிரெடிட் கார்ட், மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023

முக்கிய அறிவிப்பு:


EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு தேசிய தேர்வுகள் முகமை-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- விவரம் வெளியிடப்படும். இதற்கான தேர்வை தேசிய தேர்வுகல் முகமையின் கீழ் நடத்தப்படுகிறது. இரண்டு பணியிடங்களுக்கும் ஒரே முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

ஊதிய விவரம், கல்வித் தகுதி உள்ளிட்டவைகள் குறித்த கூடுதல் / முழு விவரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் https://recruitment.nta.nic.in/EPFORecruitment/File/ViewFile?FileId=1&LangId=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Social Security Assistant- https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_SSA_24032023.pdf - என்ற இணைப்பை காணலாம். 

 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget