மேலும் அறிய

Job Alert: சொந்த ஊரிலே பெண்களுக்கு வேலை.! கை நிறைய சம்பளம்- உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு

வேலைவாய்ப்புகளுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், பெண்களுக்கு கை நிறைய சம்பளத்தில் சொந்த ஊரில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடனே விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊரில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும்,  அரசு பணிக்கு பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் இத்திட்டத்தில் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப்பணியிடங்கள் 5)

உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப் படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.35,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும்
செம்மஞ்சேரி

மூத்த ஆலோசகர் (Senior Counselor) (காலிப்பணியிடங்கள் 5)

சமூக பணியில் முதுகலை பட்டம்பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆலோசனை உளவியலில் குறைந்தபட்ச இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட, பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.மாத ஊதியம் ரூ.22,000/- ஆகும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) (காலிப்பணியிடங்கள் 5)

மாநில/மாவட்ட/தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை.உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி


வழக்கு பணியாளர்கள் (Case worker) (காலிப்பணியிடங்கள் 30)

 உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சுழற்சி முறையில் 7 நாட்களிலும்24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.18,000/-ஆகும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

பாதுகாப்பாளர் (Security Guard) (காலிப்பணியிடங்கள் 10)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.மாத ஊதியம் ரூ.12,000/- ஆகும்.
பணியிடங்கள் : நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும்
செம்மஞ்சேரி

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள் 10)

விண்ணப்பதாரருக்கு சமையல் மற்றும் அலுவலகத்தை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும்24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி


பணியில் சேர விரும்பும் நபர்கள் https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 21.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! எஸ்பிஐ வங்கியில் 1,500 'PO' பணியிடங்கள்!
டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! எஸ்பிஐ வங்கியில் 1,500 'PO' பணியிடங்கள்!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
SBI PO Vacancy 2026: ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் இங்கே
SBI PO Vacancy 2026: ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் இங்கே
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Bhagyaraj Movies: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
Embed widget