மேலும் அறிய

கரூரில் குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல் - 17.5 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம்

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைவிதிக்கப்பட் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு  துறையினர் வெங்கமேடு, வெள்ளியணை, லாலாபேட்டை, புன்னம், பஞ்சப்பட்டி, குளித்தலை உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.


கரூரில் குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல் - 17.5 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

அதன் அடிப்படையில், கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள எஸ்.மார்ட் மளிகைக்கடை, வெண்ணமலையில் உள்ள லெட்சுமி மளிகைக்கடை, சிவா டீ ஸ்டால் ஆகிய இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யபப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது ஆய்வின் போது கண்டறியப்பட்டதால் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மேற்சொன்ன கடைகளுக்கு நேரில் சென்று கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், உழவர்சந்தை அருகில் உள்ள மளிகை  பொருட்கள் மொத்த விற்பனைக் கடைகளிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

கரூரில் குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல் - 17.5 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். முதல்வரின் வழிகாட்டுதலின்படியும், அறிவுறுத்தலின் படியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.  அண்மையில் நடைபெற்ற பள்ளி தலைமையாசிரியர்களின் ஆய்வு கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் இடையே புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், எந்தெந்த கடைகளில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றது என்பது குறித்த தகவல்கள் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 
  கரூரில் குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல் - 17.5 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

இதில் பல்வேறு கடைகளில் இருந்தும் 7.5 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்த கடைகள் சீல்வைக்கப்பட்டு, அவர்களின் உரிமங்களை ரத்து செய்வதற்கும், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற பொருட்களை விற்கக்கூடாது. மீறி விற்போர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்படுகின்றது.  நம் வீட்டு குழந்தைகளுக்கு இதுபோன்ற போதை  பொருட்களை கொடுக்க முன்வருவோமா என்பதை விற்பனையாளர்கள் சிந்திக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவோர் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர். சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget