மேலும் அறிய

புதுச்சேரி: 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தை தாண்டி வந்தது. புதுச்சேரி அருகேயுள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தோரும் புதுச்சேரியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் 29 தாண்டியே இருந்து வந்தது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். கடந்த வாரத்துக்கு முன்பு வரை கொரோனா நோய் பாதிப்பு ஆயிரத்துக்கு  கீழ் குறைந்தே காணப்பட்டு வருகிறது. அதேபோல  பலி எண்ணிக்கையும் 20-க்கு கீழ் வந்தபடி இருந்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 233 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரி: 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு!

 புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 561 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,803 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 3364 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 990 (95.85 சதவீதம்) ஆக உள்ளது.


புதுச்சேரி: 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா புதுச்சேரி மாநிலத்தில் 7349 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 186, காரைக்கால் – 30, ஏனாம் – 4, மாஹே – 13 பேர் என மொத்தம் 233 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவைமற்றும் காரைக்காலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறையவில்லை, ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்தன. ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரத்தில் 102 பேர் வரை உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,726 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 248 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து 1,09,990 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


புதுச்சேரி: 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 95.58. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்" என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. அடுத்தடுத்து நாட்களில் எண்ணிக்கை குறையும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
Embed widget