மேலும் அறிய

தினசரி பாதிப்பு 500-ஐ கடந்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்.. அமைச்சர் மா.சு அளித்த விளக்கம்..

சமீபத்தில் ஐந்து பேர் இறந்தது "தற்செயலானது" என்றும், "குடும்பங்கள் நிதி உதவியை பெறமுடியும் என்பதால், அவர்கள் கோவிட்-19 இறப்பு பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டனர்," என்றும் மா சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) சட்டசபையில், புதிய கொரோனா வேரியன்ட் குறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும், இது உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றும் மேலும் இதுவரை எந்த நோயாளியும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

வேகமாக பரவும் கொரோனா

சமீபத்தில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 95% மாதிரிகளில், ஒமிக்ரான் வேரியன்ட் - BA2A, XBB மற்றும் அவற்றின் துணை வேரியன்ட்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். இந்த வேரியன்ட் வேகமாக பரவுகிறது, ஆனால் லேசான மற்றும் குறைவான ஆபத்தானதாக கருதப்படுகிறது. சமீப காலமாக மீண்டும் உயர்ந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த வேரியன்ட் வேகமாக பரவும் என்று ஆய்வுகள் கூறுவதலும், இதனால் உலகம் மீண்டும் பாதிக்கப்படும் அச்சுறுத்தல்கள் இருப்பதாலும் பலர் இயல்பு நிலை பாதிக்கப்படும் அச்சத்தில் உள்ளனர். 

தினசரி பாதிப்பு 500-ஐ கடந்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்.. அமைச்சர் மா.சு அளித்த விளக்கம்..

சட்டசபையில் அமைச்சர் பதில்

எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த அமைச்சர், தனிநபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டம் கூட்டமாக பாதிக்கப்படும் க்ளஸ்டர்கள் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், தொற்று லேசானதாகவும் இருப்பதால், தீவிரமான பாதிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 5,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5 இறப்புகளுடன் 2,099 பேர் தொற்று பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்: விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? அம்பேத்கர் சிலைக்கு மாலை.. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.. பரபரப்பாகும் அரசியல் களம்..!

நிதி உதவிக்காக கொரோனா இறப்பாக கணக்கில் கொள்ளப்பட்டது

சமீபத்திய கோரோனா தொற்று பாதிப்புகள் உயர்வின்போது ஐந்து பேர் இறந்தது "தற்செயலானது" என்றும் மா சுப்பிரமணியன் கூறினார். "குடும்பங்கள் நிதி உதவியை பெறமுடியும் என்பதால், அவர்கள் கோவிட்-19 இறப்பு பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டனர். தினசரி புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500 அல்லது 1,000 ஆக இருந்தால் மட்டுமே, திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கூட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படும்," என்று அவர் கூறினார்.

தினசரி பாதிப்பு 500-ஐ கடந்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்.. அமைச்சர் மா.சு அளித்த விளக்கம்..

மாஸ்க் கட்டாயம்

இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களில் நோயாளிகளுடன் பழகும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மற்றும் அதைச் சார்ந்த மாணவர்கள் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆட்சிப் பொறுப்பேற்ற போது, 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்ததாகவும், தற்போது 2,067 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன், மருந்துகள், படுக்கைகள் மற்றும் வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர்கள் போலி கோவிட்-19 பயிற்சிகளை நடத்தி வருகின்றனர், என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget