மேலும் அறிய

கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..

கரூரில் முழு ஊரடங்கு : முக்கிய வீதிகள் வெறிச்சோடின. 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கழுகு பார்வை மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வாரத்தில் வருகின்ற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பெறுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கரூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..


கரூர் மாவட்டத்தில் முக்கிய வீதிகள் ஆன பேருந்து நிலையம், கோவை ரோடு, செங்குந்தபுரம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வாங்கபாளையம்,ராயனூர், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் 17 இடங்களில் சோதனை சாவடிகளும், 13  சோதனை சாவடிகள் நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்டு,  (பால், மருத்துவம்) உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்களை அனுமதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர வீணாக சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் எச்சரிக்கை விடுப்பதுடன் சில வாகனங்களுக்கு (ஸ்பாட் பைன்) அபராதம் விதிக்கின்றனர்.


கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தெரிவித்து தங்கள் இல்லத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முறையான காரணங்கள் சொல்லாமல், ”விடுங்கள் செல்கிறேன்” என்று கூறி வருவதால், அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உண்மையில் அவர் கூறும் பதில்கள் உண்மை என இருந்தால் அவர்களை நகரத்திற்குள் அனுமதிக்கின்றனர். இல்லை என்றால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..

தற்போது கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் முகக்கவசம் (மாஸ்க்), சமூக இடைவெளி உள்ளிட்ட தமிழக அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் அறிக்கை மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X" target="">இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

இந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  காரணமாக நேற்று இரவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அசைவ உணவுக்கு தேவையான (ஆட்டு கறி ,கோழி)  உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். மொத்தத்தில் கரூரில் பல்வேறு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதனை கழுகு பார்வை மூலம் போக்குவரத்து மற்றும் போலீசார் இணைந்து படம் பிடித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget