![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
புதுச்சேரி: புதிதாக 80 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
![புதுச்சேரி: புதிதாக 80 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..! coronavirus 80 new corono cases with 0 death in last 24 hours in puducherry புதுச்சேரி: புதிதாக 80 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/e8386c027a423e5fdb92f5103eefff28_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 80 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 160 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 608 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 768 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 79 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 608 (97.91 சதவீதம்)-ஆக உள்ளது.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 97.91. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)