மேலும் அறிய

செப்.12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - கரூர் மாவட்டத்தில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

’’கரூர் மாவட்டத்தில் 47 சதவித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10 சதவித மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது’’

வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 30 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துவது குறித்து மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நகர்புறம் மற்றும் கிராமபுற பகுதிகளை உள்ளடக்கி 540 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

செப்.12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - கரூர் மாவட்டத்தில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு


இந்த தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்  பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் இம்முகாமில் 50 ஆயிரம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மாபெரும் இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் 540 இடங்களில் கொரானா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தனியார் செவிலியர் கல்லூரி பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செப்.12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - கரூர் மாவட்டத்தில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

இக்கூட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரக பகுதியில் 416 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியில் 50 இடங்களிலும், குளித்தலை நகராட்சி பகுதியில் 15 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு அல்லது மூன்று முகாம்கள் என மொத்தம் 540 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. தடுப்பூசி ஏற்கனவே போட்டுள்ள நபர்களின் விவரங்கள், இன்னும் போட வேண்டிய நபர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 

கரூர் மாவட்டத்தில் இதுவரை 47 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 10 சதவிகித நபர்களுக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மீதம் உள்ள அனைவரும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான முகாம் நடத்துவது போலவே தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்துவது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

செப்.12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - கரூர் மாவட்டத்தில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

முகாமிலும் ஒரு தடுப்பூசி செலுத்துபவர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருப்பார்கள் தடுப்பூசி போடும் நபர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய 200 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியில் இருப்பார்கள். முகாமிற்கு மிகப்பெரிய அளவில் விரிவான திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

ஒவ்வொரு பகுதி மக்களும் கிராம பகுதியாக இருப்பின் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு உள்ளாகும், நகர்ப்புற பகுதியில் ஒரு கிலோ மீட்டர் அளவிற்குள்ளாகவும் ஊசி போடும் இடத்திற்கு வரும் வகையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக இருபது முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது கடந்த ஒரு மாதமாக 50 முகாம்களுக்கும் குறையாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிக அளவாக 540 இடங்களில் முகாம் அமைக்கப்படுகிறது, பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக வந்திருந்து தடுப்பூசி முகாமில் தடுப்பு ஊசியை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து இந்த முகாமினை ஒரு வெற்றி இயக்கமாக மாற்றி கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget