மேலும் அறிய

பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 15 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி...!

’’தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 15 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி; 10 ஆசிரியர்கள் தனிப்படுத்தப்பட்டனர்’’

தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டது, அதில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், ”அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தனர்.


பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 15 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி...!

இந்நிலையில் பள்ளி திறந்தது முதல் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய் தொற்று உள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் தொற்று ஏற்பட்ட பள்ளிகளில் பிற மாணவர்களிடம் சோதனை செய்த போது வேறு சில மாணவர்களுக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பள்ளி முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூடுதலாக செய்யப்படுகிறது.


பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 15 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி...!

கோவையை பொறுத்தவரை எட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா தெரிவிக்கையில், ”சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் எல்லா மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் நான்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி  அருகே உள்ள பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு எவ்வாறு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என தகவல் வெளியாகவில்லை.


பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 15 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி...!

திருச்சியில் ரெட்டைவாய்க்கால் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பள்ளி திறந்த அன்றே கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் பள்ளி மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 15 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி...!

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பங்குடி அருகே உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பள்ளி மாணவி பள்ளிக்கு, வரவில்லை. இருந்த போதிலும் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மேலும் சுகாதாரத்துறையினர் அப்பள்ளியின் தூய்மையை உறுதி செய்துவருகின்றனர். அதே போல் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் என தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மட்டும் 15 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

அதே போல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் பள்ளி திறப்பிற்கு முன்பாகவே பள்ளிக்கு வரவில்லை. அதே போல் திருப்பூரில் நான்கு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதே போல் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 10 ஆசிரியர்களும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இதானால் தமிழ்நாட்டில் 15 பள்ளி மாணவர்களுக்கும், 6 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget