மேலும் அறிய

கடலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 200 ரூபாய் பரிசு...!

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டியதால் கொள்வோருக்கு ரூபாய் 200 பரிசாக அளிக்கப்பட்டது இதனால் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு சென்றனர்.

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது, இதில் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.  அதன்படி கடலூர் மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

கடலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 200 ரூபாய் பரிசு...!
 
கொரோனா தடுப்பூசி முகாமை துரிதப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 909 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 200 ரூபாய் பரிசு...!
 
இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை இன்று காலை ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தனர். பல முறை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு குடுத்து வந்தாலும் மக்களுக்கு இன்னும் தடுப்பூசி மீதுள்ள பயம் களையவில்லை, அதற்காக பாதிரிக்குப்பம் ஊராட்சி பகுதியில் வாழும் மக்களுக்கு ஊராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராத மக்களுக்கு தடுப்பூசி குறித்த உரிய விழிப்புணர்வு அளித்து, பின் அப்பொழுதும் அவர்கள் முன்வர தயக்கம் காட்டியதால் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு ரூபாய் 200 பரிசாக அளிக்கப்பட்டது இதனால் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டு சென்றனர்.

கடலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 200 ரூபாய் பரிசு...!
 
ஊராட்சி நிர்வகித்தின் இந்த முயற்சியினால் பல விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடலூரில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது, மேலும் இன்று நடைபெறும் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமின் மூலம் இன்று ஒரே நாளில் 1,70000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை தாக்குவதற்கு முன்னாள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அவரவர் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் தடுப்பூசி ஒன்று தான் கொரோனவை விரட்ட நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget