மேலும் அறிய

Senna Flowers | க்ரீன் டீ தெரியும்.. ஆவாரம்பூ தேநீர் தெரியுமா? இதைக் கொஞ்சம் படிங்க..

ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால் கல்லீரலுக்கு மருந்து என சொல்லப்படுகிறது

சித்தர்கள், ”ஆவாரை பூத்திருக்க சாவாரை காண்பதுண்டோ” என்றார்கள். இதன் விளக்கம் சாராயம், பிராந்தி போன்ற போதைப் பழக்கத்தினால் உடலில் சோர்வு ஏற்பட்டு அதன் காரணமாக கல்லீரல் வீங்கியோ அல்லது கல்லீரல் பாதிப்போ ஏற்பட்டு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட முடியவில்லை என்றால் ஆவாரம் பூவை காயவைத்து இடித்து சன்னமாக சல்லித்து கால் டீஸ்பூன் பவுடரை சுடுபாலில் சேர்த்து அருந்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை சேர்க்காமலும், சர்க்கரைநோய் இல்லாதவர்கள் பாலில் சர்க்கரை சேர்த்து ஆவாரம்பூ பவுடரை நன்கு கலந்து குடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி தொடர்ந்து 21 நாள் அல்லது 48 நாள் சாப்பிட்டால் ரத்தத்திலிருந்து சாராயம், பிராந்தி போன்றவற்றால் ஏற்பட்ட நோய் நீங்கி உடல் பாதிப்பு நன்றாக மாறும்.

                           Senna Flowers | க்ரீன் டீ தெரியும்.. ஆவாரம்பூ தேநீர் தெரியுமா? இதைக் கொஞ்சம் படிங்க..
சர்க்கரை நோய்க்குச் சித்தமருத்துவம் பதிவு செய்து வைத்துள்ள ஒரே மூலிகை ‘ஆவாரை’ மட்டும்தான். சர்க்கரை நோயை குணமாக்குவதாகச் சொல்லப்படும் மூலிகைகள் துணை மருந்துகள்தானே தவிர, அவை சர்க்கரை நோய்க்கு மருந்தாகாது. ஆவாரையின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயனுள்ளவைதான். இவை ஐந்தையும் சேர்த்துப் பயன்படுத்துவதை ஆவாரைப் பஞ்சாங்கம் என்பார்கள்.  
 
ஆவாரைப் பஞ்சாங்கத்துடன் கொன்றைப்பட்டை, நாவல்பட்டை, மருதம்பட்டை, கடலழிஞ்சிப் பட்டை, கோரைக் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றிச் சூடாக்கி 1 லிட்டராக வற்றவைத்து வடிகட்டி 4 வேளை குடித்து வந்தால் சர்க்கரைநோய்க்கு பலன் அளிக்கும் எனவும் நம்பப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளது எனக் கணித்துவிட்டு மருத்துவம் மேற்கொள்ள வரும் நோயாளிகளிடம் இந்த ஆவாரைக் குடிநீரை மூன்று மாதங்கள் வரை குடிக்கக்கொடுத்து, முற்றிலும் குணமாவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம்.  ’கிரீன் டீ’ என்ற பெயரில் நாம் பருகி வரும் தேநீரை விட ஆயிரம் மடங்கு அற்புதமானது இந்த ஆவாரைக் குடிநீர். 

                         Senna Flowers | க்ரீன் டீ தெரியும்.. ஆவாரம்பூ தேநீர் தெரியுமா? இதைக் கொஞ்சம் படிங்க..
ஆவாரம் பட்டையை காய வைத்து இடித்து, சன்னமாக சலித்து சூரணமாக்கி வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் பவுடரை நான்கு டம்ளர் தண்ணீரில்போட்டு அத்தண்ணீரை ஒரு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இளம் சூட்டில் வாய் கொப்பளிக்க பல் இறுகி கெட்டியாகும்.
 
ஆடுகின்ற பற்கள் ஆடாது, சொத்தை விழுந்த பற்களில் வலி உண்டானால் அந்த வலி உடனே நிற்கும் எனவும் சொல்லப்படுகிறது. பல் ஈறுகளில் வீக்கம் இருந்தாலோ அல்லது பற்களின் ஈறுகளில் சீழ்பிடித்திருந்தாலும் இந்த நீரால் வாய் கொப்பளித்தால் இந்நோய்கள் நீங்கும்.

                         Senna Flowers | க்ரீன் டீ தெரியும்.. ஆவாரம்பூ தேநீர் தெரியுமா? இதைக் கொஞ்சம் படிங்க..
ஆவாரம் வேர் பட்டை ஐம்பது கிராம் பச்சையாகக் கொண்டுவந்து ஒன்றிரண்டாக இடித்து எட்டு டம்ளர் தண்ணீர் வைத்து இரண்டு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கசாயத்தை இருநூறு மில்லியும், வெள்ளாட்டு பால் இருநூறு மில்லியும், நல்லெண்ணெய் இருநூறு மில்லியுமாக மூன்றையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கூட்டி அடுப்பில் ஏற்றி சிறுதீயாக எரித்து வந்தால் கசாயமும், பாலும் சுண்டிய பிறகு எண்ணெய் மட்டும் இருக்கும். அந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு, தோல் நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை இந்த எண்ணெயில் கால் டீஸ்பூன் தலைக்கு தேய்த்துக்கொண்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget