மேலும் அறிய

Vijayakanth: பிரேமலதா, விஜயகாந்தின் துணைவியார் என்பதைத் தாண்டி ஒரு தாய்.. பார்த்திபன், குஷ்பு இரங்கல்!

Vijayakanth Demise: “விஜயகாந்த் சார் நம் இதயங்களுக்குள் தான் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளார். அதனால் அவர் நம்மை பிரிந்துவிடவில்லை” - பார்த்திபன்

மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் சென்னை, தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று காலை உடல்நலக்குறைவால் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமான நிலையில், அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை இறுதியாக ஒருமுறை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று சென்னை, தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.  தொடர்ந்து இன்று மதியம் தொடங்கி விஜயகாந்தின் உடல் மீண்டும் தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. 

நேற்று முதலே பல பிரபலங்கள் விஜயகாந்துக்கு நேரிலும் இணையதளத்திலும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்றும் அவரது உடலுக்கு தொடர்ந்து திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு, அவரது கணவரும் இயக்குநருமான சுந்தர்.சியுடன் வருகை தந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

சொக்கத்தங்கம் விஜயகாந்த்

தொடர்ந்து பேசிய குஷ்பு, “படப்பிடிப்பு தளத்தில் எப்பவுமே அவர் கேப்டன் தான். நாங்க எல்லாரும் அவர்கூட நடிக்கும்போது எங்களுக்கு ஒரு தைரியம் இருக்கும். எங்கள காப்பாத்த அவர் இருக்கார்னு. இன்னைக்கு இந்த கூட்டம் ஒரு நல்ல நடிகருக்கோ, அரசியல் தலைவருக்காகவோ இல்லாமல் நல்ல மனிதருக்கு கூடி இருக்கிறது.  சினிமா துறைமட்டுமில்லாமல் மக்களுக்கும் ஏதாவது ஒரு ப்ரச்னை இருந்தால் இறங்கி வேலை பார்த்திருக்கார். அவர்கூட பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுமட்டுமில்லாமல் அவர் எதிர் வீட்ல கொஞ்ச நாள் இருந்திருக்கேன். அவர் எங்கள பொருத்தவரை, மக்கள பொருத்தவரை, தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரு நல்ல மனிதர் என்றெல்லாம் கேப்டன் சார் என்றுதான் சொல்வோம். சொக்கத்தங்கம் என்றால் கேப்டன் மட்டும் தான்” எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சுந்தர். சி ”நடிகர்களில் ஒரு மாமனிதர் என்றால் அவர் கேப்டன் தான். தனக்கென்ன என ஒதுங்கி போகாமல் மற்றவர்கள் பிரச்னையை தீர்க்க வருவார். நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நான் சொல்லாத சில வார்த்தைகள் பத்திரிகையில் வந்தது. அப்போ வளரும் காலத்தில் இப்படி பேசக்கூடாது என அக்கறையுடன் என்னைக் கூப்பிட்டு அறிவுரை சொன்னார் விஜயகாந்த். அவர் ஷூட்டிங்கில் மட்டும் எல்லாரும் பாதுகாப்பாக உணர்வார்கள். அப்படிப்பட்ட மாமனிதரின் மறைவுக்கு அஞ்சலிகள்” எனப் பேசியுள்ளார்.

‘நமது இதயங்களில் கேப்டன் அடக்கம் செய்யப்படுவார்’

தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், “ மரணம் எல்லாருக்கும் வரும். ஆனால் அது இப்படி தான் வரணும். ஒரு மரணத்தின்போது தான் ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதற்கான அவ்வளவு அடையாளங்களும் இருக்கும். எனக்கு தெரிஞ்சு ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ரசிகர்கள் மாறுபாடுவார்கள். ஒருவரின் நடிப்பை ரசிப்பார்கள். ஒரு நடிகரின் அறிவை ரசிப்பார்கள். ஆனால் விஜயகாந்த் சாரின் ரசிகர்கள் அவரது மனிதாபிமானத்துக்கு மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நான் அவருக்கு தீவிர ரசிகர். விஜயகாந்த் சார் நம் இதயங்களுக்குள் தான் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளார். அதனால் அவர் நம்மை பிரிந்துவிடவில்லை. அவர் உடலளவில் பிரிந்து நம் மனதுக்குள் வர உள்ளார்.

நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் அஞ்சலி செலுத்துகிறோம் என இன்று ஒரு நாளுடன் விட்டுவிடாமல், அவர் செய்த விஷயங்களை செய்வோம்.

 சினிமாவுக்காக அவர் வாய்ப்பு தேடும்போது, ரோஹிணி லாட்ஜ் டிநகரில் அவர் இருந்தபோது, தனக்கு குறைவான வசதிகள் இருந்தபோதும் தனக்கு வரும் பெரிய கேரியரில் மற்றவருக்கு உணவு பறிமாறி விட்டு சாப்பிடுவார். என் முதல் படம் சைதாப்பேட்டையில் தொடங்கியபோது 4 மணிக்கு ஷூட்டிங் முடிந்து படுத்து 6 மணிக்கு வந்துவிட்டார். என் முதல் படத்துக்கு அவர் தான் கிளாப் அடித்து தொடங்கி வைத்த மனிதர். இதுபோல் எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர் இருக்கிறார். நான் அவரோட துணைவியாரிடம் கூட சொன்னேன். அவருடைய மனைவிங்கறத தாண்டி தாய் அப்படிங்கற இடத்துல இருந்திருக்காங்க. அதனால் தான் இந்த சோகம் இவ்வளவு லேட்டா நமக்கு வந்து இருக்கு.  மனித சக்தி அவ்வளவு தான். அவர் போல் நாம் மனிதநேய பணிகள் தொடரணும். அது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி” எனப் பேசியுள்ளார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Tata Punch EV Facelift 2026: புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
Embed widget