மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி
தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்க உள்ளனர்

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. முன்னதாக சிம்பு நடிக்க இருந்த கதையில் விஜய் சேதுபதி நாயகனாகவும் சாய் பல்லவி நாயகியாகவும் நடிக்க உள்ளார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். இது தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்கள் தவிர்த்து வித்தியாசமான முயற்சியில் மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி , அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் புரி ஜகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் , மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் ஆகிய படங்களும் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.
பிக்பாஸ் விமர்சனம்
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆனால் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் அடுத்த சீசன் முதல் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி
இந்த வரிசையில் அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் ரொமாண்டிக் கதைக்களத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். முன்னதாக சிம்பு இந்த கதையில் நாயகனாக நடிக்க இருந்து பின் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















