மேலும் அறிய

ABP Nadu Exclusive: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய 'விடுதலை' திரைப்படம் - என்ன நடந்தது?

எழுத்தாளர் ச.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என்ற புத்தகங்களில் இடம்பெற்ற காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த மார்ச்-31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விடுதலை திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எழுத்தாளர் ச.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என்ற புத்தகங்களில் இடம்பெற்ற வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பழங்குடியின மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக எழுத்தாளர் இரா.முருகவேள் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும். 

தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா நடந்தது தர்மபுரி மாவட்டத்தில். 1980 ஆம் ஆண்டு. தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 87 இல் என்று நினைக்கிறேன். ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன்  மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 1993 முதல் 1996 ம் ஆண்டுகளில் வீரப்பன் வேட்டையின் போது நடந்தது. இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ்நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்கு பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனின் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே. மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.


ABP Nadu Exclusive: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய 'விடுதலை' திரைப்படம் - என்ன நடந்தது?

வனத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதே படத்தில் இல்லை. படத்தில் வனத்துறையே இல்லை. பழங்குடிகள் வேறு, தலித்துகள் வேறு என்பது கூட தெரியவில்லை போல இருக்கின்றது. மக்களை சுரங்கத்துக்காக வெளியேற்றும் நடவடிக்கை ஏதாவது உள்ளதா என்றும் படத்தில் இல்லை. அதிரடிப் போலீஸ்காரர்கள் கோழி திருடர்கள் என்று வீரப்பன் தன் வீடியோக்களில் கிண்டல் செய்வார். போலீஸ்காரர்கள் ஏதோ பஞ்சம் பட்டினியில் இருந்தது போல காட்சி அமைத்திருப்பது மோசடி ஆகும். நக்சல் வேட்டை, வீரப்பன் வேட்டை ஆகியவை பல மாதங்கள் மாநிலத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் திட்டமிடல் செய்யப்பட்டு ஒருங்கிணைக்க பட்டு நடத்தப்பட்டவை. படம் இந்த நடவடிக்கைகளின் முழுப் பரிமாணத்தையும் தவற விட்டு அபத்தமாக எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏபிபி நாடுவிடம் பேசிய எழுத்தாளர் சிவசுப்பிரமணியன், “விடுதலை படத்தில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் சிறப்பாக எடுத்துள்ளார். சத்தியமங்கலம் காடுகளில் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவங்களில் இருந்து இக்காட்சிகள் எடுக்கப்பட்டது என வெற்றிமாறன் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் பலரின் கவனம் பாதிக்கப்பட்ட மக்களின் மீது திரும்பி, அவர்களுக்கு உதவிகள் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. அதை செய்திருக்கலாம். மற்றபடி எனது நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏபிபி நாடுவிடம் பேசிய எழுத்தாளர் ச.பாலமுருகன், “யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என கதை விவாதம் என்ற பெயரில் பல நூல்களில் இருந்து காட்சிகள் திருடப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் விடுதலை படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை பார்த்ததும் எனது கருத்தை சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayakumar vs EPS : ’’பழசை மறந்துட்டீங்களா EPS?'' Silent mode-ல் ஜெயக்குமார் வெளியான பகீர் பின்னணி
Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
MR Vijayabhaskar : ’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
Ramadoss Vs Anbumani: “என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
“என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
Embed widget