மேலும் அறிய

Vairamuthu Condolences:"மாரிமுத்துவின் மரணம் உறவுகளின் மரணம்.." பெரும் சோகத்தில் கவிஞர் வைரமுத்து..!

மாரி முத்துவின் மரணம் என்பது ஒரு கலைஞனின் மரணம் மட்டுமல்ல, ஒரு நடிகரின் மரணம் என்பதைவிட எனது உறவுகளின் மரணம் என்பதுதான் சரி என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சினிமா, சின்னத்திரை மட்டும் இல்லாது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ள விஷயம் இயக்குநரும் நடிகருமான ‘எதிர் நீச்சல்’ புகழ் மாரிமுத்துவின் தீடீர் மரணம்தான். எதிர்நீச்சல் தொடருக்காக இவர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு திரும்பியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். 

கையெழுத்தை பார்த்து வியந்தேன்:

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மூத்த கவிஞரான வைரமுத்து ஏபிபிநாடுவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மறைந்த நடிகர் மாரி முத்துவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், ஒருநாள் மாரிமுத்து என்னை வந்து சந்தித்து, உங்களுடன் நான் பணியாற்றுகிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டார். நான் உனக்கு என்ன தெரியும் எனக் கேட்டேன். அதற்கு மாரிமுத்து நவீன இலக்கியங்களின் பெயர்களை ஒப்பித்தார்.  எனது கவிதைகளையும் வார்த்தை தவறாமல் கூறினார்.

அதைத் தொடர்ந்து நான் கூறுவதை எழுது எனக் கூறினேன். அவரது கையெழுத்தைப் பார்த்து நான் மிகவும் வியந்துபோனேன். முத்து கோர்த்தது போல் அவருடைய கையெழுத்து இருந்தது. அச்சடித்து வார்த்தைப் போன்ற ஒற்றுப்பிழை இல்லாத இலக்கணப் பிழை  வாக்கியங்களைப் பார்த்து என்னுடன் கொஞ்ச காலம் இரு எனக் கூறினேன். 

எங்கள் ஊர் பையன்:

அதன் பிறகு அந்த நேரத்தில் பாடல்கள் சொல்வேன் அவர் எழுதுவார். கல்கியில் சிகரங்கள் நோக்கி என்ற தொடர் எழுதிக்கொண்டு இருந்தேன். தொடரின் சில அத்தியாயங்களை நான் சொல்ல சொல்ல அவர் எழுதுவார். நான் சொல்லச் சொல்ல அவர் முகத்தில் வரும் புன்னகையை, பரவசத்தை, ஆச்சரியத்தை பார்த்து, வரிகளின் சிறப்பை உணர்ந்து கொண்டு மேலே பயணப்படுவேன். நீங்கள் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றார். அவர் எங்கள் ஊர் பையன்.

வருச நாடு அவர் பிறந்த ஊர். மலைக்கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அடக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வெளிவந்த ஒருவர். பாறைகளுக்கு கீழே ஒரு விதை விழுந்து விட்டது, அந்த பாறைகளை மீறி அது முளைத்துவிட்டது என்பது மாரி முத்துவுக்கும் பொருந்தும். நான் எனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து, மாலை எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். மங்கள பூக்கள் அவர் மீது இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நான் இன்று சவப்பெட்டியில் அவருக்கு விழும் இறுதிப் பூக்களை பார்க்கும்போது மனது நடுங்கிறது. எனது கவிதையின் பிரச்சார பீரங்கி மாரிமுத்து. தமிழ் சினிமாவில் எனது கவிதையின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் என்றால் அது மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மாரிமுத்துவும்தான். 


Vairamuthu Condolences:

உறவுகளின் மரணம்:

மாரி முத்துவின் மரணம் என்பது ஒரு கலைஞனின் மரணம் மட்டுமல்ல, ஒரு நடிகரின் மரணம் என்பதைவிட எனது உறவுகளின் மரணம் என்பதுதான் சரி. சற்றும் எதிர்பாராத செய்தி. ஜெண்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணியுடன் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். இந்த செய்தி கேட்டதும் எழுதிக்கொண்டு இருந்த பேனா நின்று விட்டது.

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு இருந்த எனது உடல் நாற்காலியில் சரிந்துவிட்டேன். 56 வயது என்பது மரணிக்கும் வயது அல்ல. அதுவும் வாழ்க்கையில் வறுமையின் பள்ளத்தில் இருந்து செல்வத்தின் சிகரத்தினை நோக்கி சென்றுகொண்டு இருக்கையில் மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. கருணை இல்லாத மரணத்தின் குற்றம் என நான் நினைக்கிறேன். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget