மேலும் அறிய

Vairamuthu Condolences:"மாரிமுத்துவின் மரணம் உறவுகளின் மரணம்.." பெரும் சோகத்தில் கவிஞர் வைரமுத்து..!

மாரி முத்துவின் மரணம் என்பது ஒரு கலைஞனின் மரணம் மட்டுமல்ல, ஒரு நடிகரின் மரணம் என்பதைவிட எனது உறவுகளின் மரணம் என்பதுதான் சரி என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சினிமா, சின்னத்திரை மட்டும் இல்லாது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ள விஷயம் இயக்குநரும் நடிகருமான ‘எதிர் நீச்சல்’ புகழ் மாரிமுத்துவின் தீடீர் மரணம்தான். எதிர்நீச்சல் தொடருக்காக இவர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு திரும்பியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். 

கையெழுத்தை பார்த்து வியந்தேன்:

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மூத்த கவிஞரான வைரமுத்து ஏபிபிநாடுவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மறைந்த நடிகர் மாரி முத்துவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், ஒருநாள் மாரிமுத்து என்னை வந்து சந்தித்து, உங்களுடன் நான் பணியாற்றுகிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டார். நான் உனக்கு என்ன தெரியும் எனக் கேட்டேன். அதற்கு மாரிமுத்து நவீன இலக்கியங்களின் பெயர்களை ஒப்பித்தார்.  எனது கவிதைகளையும் வார்த்தை தவறாமல் கூறினார்.

அதைத் தொடர்ந்து நான் கூறுவதை எழுது எனக் கூறினேன். அவரது கையெழுத்தைப் பார்த்து நான் மிகவும் வியந்துபோனேன். முத்து கோர்த்தது போல் அவருடைய கையெழுத்து இருந்தது. அச்சடித்து வார்த்தைப் போன்ற ஒற்றுப்பிழை இல்லாத இலக்கணப் பிழை  வாக்கியங்களைப் பார்த்து என்னுடன் கொஞ்ச காலம் இரு எனக் கூறினேன். 

எங்கள் ஊர் பையன்:

அதன் பிறகு அந்த நேரத்தில் பாடல்கள் சொல்வேன் அவர் எழுதுவார். கல்கியில் சிகரங்கள் நோக்கி என்ற தொடர் எழுதிக்கொண்டு இருந்தேன். தொடரின் சில அத்தியாயங்களை நான் சொல்ல சொல்ல அவர் எழுதுவார். நான் சொல்லச் சொல்ல அவர் முகத்தில் வரும் புன்னகையை, பரவசத்தை, ஆச்சரியத்தை பார்த்து, வரிகளின் சிறப்பை உணர்ந்து கொண்டு மேலே பயணப்படுவேன். நீங்கள் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றார். அவர் எங்கள் ஊர் பையன்.

வருச நாடு அவர் பிறந்த ஊர். மலைக்கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அடக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வெளிவந்த ஒருவர். பாறைகளுக்கு கீழே ஒரு விதை விழுந்து விட்டது, அந்த பாறைகளை மீறி அது முளைத்துவிட்டது என்பது மாரி முத்துவுக்கும் பொருந்தும். நான் எனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து, மாலை எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். மங்கள பூக்கள் அவர் மீது இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நான் இன்று சவப்பெட்டியில் அவருக்கு விழும் இறுதிப் பூக்களை பார்க்கும்போது மனது நடுங்கிறது. எனது கவிதையின் பிரச்சார பீரங்கி மாரிமுத்து. தமிழ் சினிமாவில் எனது கவிதையின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் என்றால் அது மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மாரிமுத்துவும்தான். 


Vairamuthu Condolences:

உறவுகளின் மரணம்:

மாரி முத்துவின் மரணம் என்பது ஒரு கலைஞனின் மரணம் மட்டுமல்ல, ஒரு நடிகரின் மரணம் என்பதைவிட எனது உறவுகளின் மரணம் என்பதுதான் சரி. சற்றும் எதிர்பாராத செய்தி. ஜெண்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணியுடன் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். இந்த செய்தி கேட்டதும் எழுதிக்கொண்டு இருந்த பேனா நின்று விட்டது.

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு இருந்த எனது உடல் நாற்காலியில் சரிந்துவிட்டேன். 56 வயது என்பது மரணிக்கும் வயது அல்ல. அதுவும் வாழ்க்கையில் வறுமையின் பள்ளத்தில் இருந்து செல்வத்தின் சிகரத்தினை நோக்கி சென்றுகொண்டு இருக்கையில் மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. கருணை இல்லாத மரணத்தின் குற்றம் என நான் நினைக்கிறேன். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget