2 மனைவி.. 4 குழந்தைங்க.. கல்யாணம் பண்ண சொன்னாங்க - ரகசியம் பகிர்ந்த ஊர்வசி
தனக்கு வந்த திருமண ப்ரபோசல் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் ஊர்வசி ரவுட்டேலா.
பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் திவா யூனிவர்ஸ் அழகி பட்டத்தை பெற்றவர் இவர்.
அதுமட்டுமின்றி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தனக்கு வந்த திருமண ப்ரபோசல் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஊர்வசி, எகிப்தியன் பாடகர் ஒருவர் எனக்கு திருமணத்துக்காக ப்ரபோஸ் செய்தார். கலாச்சார வேறுபாடு காரணமாக நான் முடியாது எனக் கூறிவிட்டேன். அந்த பாடகருக்கு ஏற்கனெவே இரண்டு மனைவிகள் உள்ளனர். 4 குழந்தைகள் உள்ளனர். எனக்கு நிறைய திருமணம் ப்ரபோஸ் வந்துள்ளது’’ என்றார்.
View this post on Instagram
அவரது நேர்காணலுக்குப் பின் யார் அந்த பாடகர் என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் யார் அந்த எகிப்து பாடகர் என ஊர்வசி பெயரைக் குறிப்பிடவில்லை.
ஊர்வசி ரவுட்டேலா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் பல புகைப்படங்கள் சோஷியல்மீடியாவில் வைரலாகியுள்ளது. முன்னதாக பளபளவென அணிந்துவந்து இணையத்தை சூடேற்றினார் ஊர்வசி. அந்தப் ஃபோட்டோவில் நீலம் மற்றும் சில்வர் கிறிஸ்டல் பதிக்கப்பட்ட பாடிகன் உடையை அணிந்திருக்கும் ஊர்வசி அதற்கு ஏற்றாற் போல் சாக்ஸ் மற்றும் மேக்கப்பையும் போட்டிருக்கிறார். ஊர்வசி ரவுட்டேலா அணிந்துள்ள இந்த ஒளிரும் பாடிகன் உடையின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் ஆகும். இந்த உடை எந்த அறையையும் ஒளிரச் செய்யும் தன்மை கொண்டது.
View this post on Instagram