![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amudhavum Annalakshmiyum: கிண்டல் செய்த தீபா.. கண்டுக்கொள்ளாத செந்தில்.. கடுப்பான அமுதா.. இன்றைய எபிசோட் இதோ..!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
![Amudhavum Annalakshmiyum: கிண்டல் செய்த தீபா.. கண்டுக்கொள்ளாத செந்தில்.. கடுப்பான அமுதா.. இன்றைய எபிசோட் இதோ..! zee tamizh amudhavum annalakshmiyum serial today episode 190 highlights Amudhavum Annalakshmiyum: கிண்டல் செய்த தீபா.. கண்டுக்கொள்ளாத செந்தில்.. கடுப்பான அமுதா.. இன்றைய எபிசோட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/1e1c0c3a9ba30f0ca4e684f8a7b625621676537955940572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவை தீபா நக்கலாக பேசும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெறுகிறது.
அமுதாவும் அன்னலட்சுமியும்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
முன்னதாக செந்திலுடன் படித்த தீபா, வீட்டுக்கு வருகிறாள். அவள் செந்திலிடம் பேசுவதை பார்த்து அமுதாவுக்கு கோபமாக வருகிறது. இதனால் டென்ஷனாகும் அமுதா, செந்திலை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறாள்.
இன்றைய எபிசோடில் செந்திலுக்கு போன் வர அவன் போனை எடுக்காமல் இருக்கிறான். இதனால் அமுதா அவனிடம் யாரு போன்ல என கேட்கிறாள். என் நண்பன் ஒருத்தன் தான் என சொல்ல, அப்படின்னா பேச வேண்டியது தானே என அமுதா கூற செந்தில் மறுக்கிறான். உடனே அமுதா என் முன்னாடி பேசக் கூடாத அளவுக்கு அப்படி என்ன ரகசியம் என கேட்க, இல்ல படிக்கிறப்ப இடைஞ்சலாக இருக்கும்ன்னு எடுக்கல என சொல்கிறான். இதனையடுத்து அமுதா ஹெட்போனை எடுத்து ஒன்றை அவள் காதிலும் இன்னொன்றை செந்தில் காதில் மாட்டிவிட்டு போனை அட்டெண்ட் பண்ணுகிறாள்.
போனில் தீபா பேசுகிறாள். அவர் செந்திலிடம் ரொமாண்டிக் ஆக பேச அமுதா அவனை முறைத்துப் பார்க்கிறாள். நாங்க எல்லாம் படிச்சி வயசான மாதிரி இருக்கோம், நீ இன்னும் ஸ்மார்ட்டாவே இருக்க என பில்ட்-அப் ஏற்றுகிறார். ஆனா நீ கல்யாணம் பண்ண பொண்ணுக்கு தான் மூக்கு சப்பையா இருக்கு, கண்ணும் சைனீஸ் கண்ணு மாதிரி இருக்கு என அமுதாவை நக்கலடிக்க செந்தில் சமாளித்து போனை கட் செய்கிறான். இதனையடுத்து அமுதா செந்திலிடம் என்னை பத்தி கிண்டல் பண்றா, நீங்க ஏன் ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க என கோபப்படுகிறாள்.
பிறகு புவனாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர புவனா தனக்கு கல்யாணம் இப்போது வேண்டாம் என சொல்ல அனைவரும் கோபப்படுகின்றனர். அமுதா அவளுக்கு பிடிக்கலேன்னா வேண்டாம் என சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு அமுதா புவனாவிடம் என்ன காரணம் என கேக்க தான் ஒருவரை விரும்புவதாக சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)