![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amudhavum Annalakshmiyum: செந்திலை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்த அமுதா.. அடுத்து நடக்கப்போவது என்ன?
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
![Amudhavum Annalakshmiyum: செந்திலை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்த அமுதா.. அடுத்து நடக்கப்போவது என்ன? zee tamizh amudhavum annalakshmiyum serial today episode 189 highlights Amudhavum Annalakshmiyum: செந்திலை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்த அமுதா.. அடுத்து நடக்கப்போவது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/3245fd983c9747e32e2c2df115acd6111676461234941572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்திலை தன் கட்டுப்பாட்டில் வைக்க அமுதா முடிவு செய்யும் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
அமுதாவும் அன்னலட்சுமியும்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
முன்னதாக கல்லூரியில் செந்திலுக்கு தேர்வு நடைபெறுகிறது. அதில் செந்தில் சரியாக பதில் சொல்ல, அமுதா மகிழ்ச்சியடைகிறார். நடப்பதை எல்லாம் வீடியோ காலில் அன்னமும், மாணிக்கமும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். செந்தில் பதில் சொல்லி முடித்ததும் துறை முதல்வர் அவனை கட்டியணைத்து பாராட்டுகிறார்.
இன்றைய எபிசோடில், செந்திலின் வீட்டிற்கு வரும் தீபா செந்திலை கட்டிப்பிடிக்கிறாள். இதனை அமுதா அதிர்ச்சியாக பார்க்க, செந்தில் தன் கூடப் படித்தவள் என தீபாவை அறிமுகப்படுத்துகிறான்.நேற்று தான் காலேஜில் பேராசிரியை ஆக வேலைக்கு சேர்ந்தேன். எல்லோரும் உன்னை பற்றி தான் சொன்னாங்க. ஏதோ வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்துல வர்ற மாதிரி பாஸ் பண்ணிட்டியாமே.. என சொல்ல செந்திலுக்கு தர்மசங்கடமாகிறது.
மேலும் காலேஜ் படிக்கிறப்ப உன்னை நான் லவ் பண்ணிட்டு இருந்தேன். அப்ப மிஸ் ஆகிட்டான் என தீபா சொல்ல அமுதா முகம் மாறுகிறது. இதனையடுத்து அமுதா மாணிக்கத்திடம் சென்று தீபா பற்றி குறை சொல்கிறாள். உடனே மாணிக்கம் அமுதாவிடம், செந்தில் பத்தி பில்ட் அப் ஏற்றி விடுகிறார். இனி எல்லாம் உன் கைல தான் இருக்கு, நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ என சொல்ல அமுதா யோசிக்கிறாள்.
அப்படியே அமுதா கனவில் செந்தில் தீபா பற்றி நினைத்து பார்க்கிறாள். இதனால் அமுதா செந்திலை தன்னை விட்டு நகரவிடக் கூடாது என முடிவு செய்து தனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் படி தெரிவிக்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)