Karthigai Deepam Serial: ரேவதிக்கு நாள் குறித்த ரவுடிகள்.. கவலையில் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthhigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்:
அதாவது, கார்த்திக் ரேவதியை தேட ரோகினி அவள் வெளியே சென்றிருப்பதாக சொன்னதும் கார்த்திக் அவளைத் தேடி வெளியே வருகிறான். ரேவதி பைக் ஷோரூம் வந்து பைக்கை புக் செய்து விட்டு வெளியே வருகிறாள்.
அப்போது ரவுடிகள் அவளை குத்த போக கார்த்திக் போன் செய்ய ரேவதி கையில் இருந்த போன் தவறி கீழே விழ ரேவதி அந்த போனை எடுப்பதற்காக குனிய கத்திக் குத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறாள். பிறகு ரேவதி ரவுடிகளிடமிருந்து தப்பி ஓடி வர கார்த்திக் அவர்களை காப்பாற்றுகிறான்.
நாள் குறித்த ரவுடிகள்:
மறுபக்கம் ரவுடிகள் இன்னைக்கு தப்பிட்டா நாளைக்கு கொல்லாமல் விட மாட்டோம் என செல்கின்றனர். அடுத்த நாள் ரேவதி கார்த்தியை கட்டியணைத்து முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்களை சொல்கிறாள்.
சந்திரகலா வழக்கம் போல சாமுண்டீஸ்வரியை ஏற்றி விட முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























