![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamizha Tamizha: ”தண்ணி அடிச்சுட்டு அடிப்பாரு; கண்ணு அப்படியே உள்ள போயிரும்" - மனம் வெதும்பி பேசிய மாமியார்.. துடித்துப் போன மருமகள்!
’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
![Tamizha Tamizha: ”தண்ணி அடிச்சுட்டு அடிப்பாரு; கண்ணு அப்படியே உள்ள போயிரும் Tamizha Tamizha this week promo discussion on friendly mother in laws vs lovely daughter in law Tamizha Tamizha: ”தண்ணி அடிச்சுட்டு அடிப்பாரு; கண்ணு அப்படியே உள்ள போயிரும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/fea93cb79cc17c1905e4c89d733091021693045798246572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tamizha Tamizha: 'தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழா தமிழா:
சின்னத்திரையில் நேரம், காலம் பாராமல் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இவற்றில் விவாத நிகழ்ச்சிகள் எப்போதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தை கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். அதன்பிறகு, தற்போது பத்திரிகையாளர் ஆவுடையப்பன தொகுத்து வழங்கி வருகிறார்.
சிறிய இடைவெளிக்குப் பின், இந்நிகழ்ச்சி தற்போது ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வாரம் ’பிரன்டலி மாமியார்கள்' vs ’லவ்லி மருமகள்கள்' என்ற தலைப்பில் கீழ் விவாதம் நடைபெற இருக்கிறது.
அரங்கத்தில் கண்கலங்கிய பெண்:
தற்போது வெளியான ஒரு ப்ரோமோவில், தொகுப்பாளர் ஆவுடையப்பன் “உங்களுக்கு ஒர மாமியார் இருந்திருப்பாங்க, அவங்க உங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டாங்க?” என்று மாமியார் தரப்பில் இருக்கும் ஒருவரிடம் கேள்வி கேட்டார்.
இதற்கு அந்த பெண், ”நான் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். பாவாடை தாவணியோடு தான் அவங்க வீட்டிற்கு போனேன். நான் போன நேரத்தில் வீடு கட்டுனாங்க. அப்போது, மண்ணு சுமக்கிறது முதல் எல்லா வேலையும் நான் செய்வேன். இந்த வேலைகளை எல்லாம் செய்து முடிச்சிட்டு நான் தூங்குறத்துக்கு இரவு 10 மணி இல்லனா 11 மணி ஆகும்.
எங்கய்யா இருக்கீங்க நீங்கெல்லாம்...!!!🤣
— Zee Tamil (@ZeeTamil) August 24, 2023
தமிழா தமிழா | Every Sunday at 12pm.#TamizhaTamizha #Avudaiappan #ZeeTamilPromo #Promo #ZeeTamil pic.twitter.com/B6U0LK4KPd
என் கணவர் குடிச்சிட்டு வந்து தினம் தினம் என்னை அடிப்பாரு. என்னோட முகம், கண், வாய் எல்லா இடமும் அவர் அடிச்ச தழும்பு தான் அடையாளம். நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன். நான் வீட்டு வேலைக்கு போறேன்னு கூட என்னோட மருமகள் கிட்ட சொன்னது இல்ல. ஆனா, என் மருமருகளை நான் இப்போ ராணி மாதிரி வச்சிருக்கேன். நான் அனுபவித்த கஷ்டம் என் மருமகளுக்கு இருக்கக் கூடாது” என்று கண் கலங்கியப்படி கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவருடைய மருமகள் கண்கலங்கி அழுதப,டி“ உங்கள புரிஞ்சுக்காம நிறைய பண்ணிட்டேன். உங்கள நிறைய கஷ்டப்படுத்திருக்கேன். சாரி அத்தை” என்று கேட்க, அதற்கு அந்த மாமியார், “நீ இந்த மாதிரி அழுதுருவியோனு தான் நான் உன்கிட்ட சொல்லுவதில்லை” என்று கூறினார். பின்னர், இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தம்மிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)