![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meenakshi Ponnunga: மீனாட்சி குடும்பத்துக்கு வந்த சிக்கல்.. சக்தி எடுத்த முடிவு..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!
கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது அம்மா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள். மேலும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறார்.
![Meenakshi Ponnunga: மீனாட்சி குடும்பத்துக்கு வந்த சிக்கல்.. சக்தி எடுத்த முடிவு..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..! meenakshi ponnunga serial today episode 82 highlights Meenakshi Ponnunga: மீனாட்சி குடும்பத்துக்கு வந்த சிக்கல்.. சக்தி எடுத்த முடிவு..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/8234a518fd4023c6c1a6787cde1c7a0b1669116696839572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சிக்கு தான் விடுதலையானதிற்கான உண்மையான காரணம் தெரியவரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
கதைக்கரு
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்னவென்று பார்க்கலாம்
மீனாட்சிக்கு தெரிய வரும் காரணம்
முன்னதாக சங்கிலி இன்னும் சாகவில்லை என்பதை வெற்றி தெரிந்து கொள்கிறார். உடனே சங்கிலி குடித்துவிட்டு ரூமில் கிடந்ததை கண்டுபிடித்து அவனை கோர்ட்டுக்கு அழைத்து வந்து கார்த்திக்கிடம் ஒப்படைத்து அதன் வழியாக மீனாட்சி விடுதலையாகிறார். இதன்பின்னர் வெற்றி நடந்த சம்பவங்களை கார்த்திக்கிடம் சொல்கிறான். நான் வந்து பேசுகிறேன் என கார்த்திக் சொல்ல என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் என வெற்றி தெரிவிக்கிறார். மேலும் என்ன ஆனாலும் மீனாட்சியம்மா குடும்பத்திற்கு என்ன ஆனாலும் நான் வருவேன் எனவும் அவர் கூறுகிறார்.
View this post on Instagram
இதனையடுத்து இன்றைய எபிசோடில் அடுத்து கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது அம்மா கல்யாணத்துகு ஏற்பாடு செய்கிறாள். மேலும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட, கார்த்திக் வேறு வழியில்லாமல் மணவறையில் அமர்கிறான். மேலும் யமுனாவுக்கு கல்யாணம் பற்றி போனில் தகவல் அனுப்புகிறார்.
அதைப் பார்க்கும் துர்கா, சக்தியிடம் இதனைச் சொல்ல முடிவெடுத்து சந்திக்க செல்கிறார். வழியில் செல்வாவைப் பார்க்க அவரிடம் நடந்ததை துர்கா சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் செல்வா கார்த்திக் கல்யாணத்தை நிறுத்த முடிவெடுக்கிறார்.அதேசமயம் துர்கா சக்தியுடன் இணைந்து கல்யாணத்தை நிறுத்த செல்கிறார். ஆனால் இருவரும் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கு முன்பு செல்வா முகமூடி போட்டுக்கொண்டு கார்த்திக் கல்யாணத்தை நிப்பாட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)