மேலும் அறிய

Ethir neechal : மீண்டும் ஜீவானந்தத்தை சந்தித்த ஈஸ்வரி... குணசேகரனாக மாரிமுத்துவை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்... எதிர் நீச்சலில் நேற்று 

Ethir neechal Sep 15 : குணசேகரனாக நேற்று எபிசோடில் மீண்டும் மறைந்த நடிகர் மாரிமுத்துவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி மிகவும் சந்தோஷமாக தனது மாமியார் மற்றும் ஆதிரையை அழைக்கிறாள். அந்த நேரம் பார்த்து கரிகாலன் வர பின்னாடியே ஞானமும், கதிரும் மாடியில் இருந்து இறங்கி வருகிறார்கள். "இதுங்க எதுக்கு வருதுங்க" என முணுமுகிறார்கள் நந்தினியும் ரேணுகாவும். 

 

Ethir neechal : மீண்டும் ஜீவானந்தத்தை சந்தித்த ஈஸ்வரி... குணசேகரனாக மாரிமுத்துவை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்... எதிர் நீச்சலில் நேற்று 

கரிகாலன் அந்த பையில் "என்ன பிரசாதமா?" என பையை எடுக்க வர அதை மடக்கென எடுத்து விடுகிறாள் நந்தினி. விசாலாட்சி அம்மா "இது பொம்பளைங்களுக்கான பிரசாதம் இதை நீ பார்க்கக்கூடாது. பார்த்தா கபோதியா ஆயிடுவ" என மிரட்ட கரிகாலன் இல்ல எனக்கு வேண்டாம் கண்ணு தான் ஹனிமூனுக்கு முக்கியம் என சொல்லி ஒதுங்கி விடுகிறான். 

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு நந்தினி விசாலாட்சி அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்று சம்பளமும் அட்வான்ஸும் கொடுத்ததை பற்றி சொல்லி  அவள் வாங்கி வந்த ஸ்வீட்டையும் கும்பகோணம் வெத்தலையையும் கொடுக்கிறாள். ஆதிரைக்கு வாங்கி வந்த லிப்ஸ்டிக் கொடுக்கிறாள். திரும்பவும் கரிகாலன் வந்து அந்த பிரசாதம் பற்றி கேட்க விசாலாட்சி அம்மா விரட்டி விடுகிறார். மீனாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.

ஈஸ்வரி ஒரு ட்ரஸ்டில் பெண்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பதற்காக ஒரு சென்றுள்ளாள். "இங்கு இருக்கும் பெரும்பாலான பெண்கள் குடிக்கு அடிமையான கணவர்களால்  வாழ்க்கையை இழந்த விதவை பெண்கள். இவர்களின் திறமை வெளியில் வரவேண்டும். நாங்கள் அவர்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் வேலை வாங்குவதற்காக அப்படி சொல்கிறோம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் நீங்கள் தான் அவர்களின் கூண்டுக்குள் இருந்து வெளிவர மோட்டிவேட் செய்ய வேண்டும்" என டிரஸ்ட் நிர்வாகி ஒருவர் ஸ்வ்ரியிடம் சொல்கிறார். 

ஈஸ்வரி பேசுகையில் "இவர்களை விடவும் தன்னம்பிக்கையை இழந்து சமையலறையிலேயே முடங்கி போய் இருந்தேன். திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என முடங்கி போய் இருந்தேன். என்னாலேயே அதில் இருந்து வெளிவர முடியும் என்றால் இவர்களால் நிச்சயமாக வெளியில் வர முடியும்" என சொல்கிறாள். 

அந்த இடத்தில் வெண்பா வந்து நிற்க ஆச்சரியப்படுகிறாள் ஈஸ்வரி. ஜீவானந்தம் அந்த ட்ரஸ்டுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார் என சொல்கிறார்கள். வெண்பா ஈஸ்வரியை அப்பா வர வரும் வரைக்கும் இருக்க சொல்கிறாள். பிறகு தர்ஷன், ஈஸ்வரி, ஜீவானந்தம் மற்றும் வெண்பா ஒரு டீ ஷாப்பில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

Ethir neechal : மீண்டும் ஜீவானந்தத்தை சந்தித்த ஈஸ்வரி... குணசேகரனாக மாரிமுத்துவை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்... எதிர் நீச்சலில் நேற்று 
"வீட்டில் அப்பா உங்களை பற்றி தப்பாக பேசும் போது எனக்கும் கோபம் வந்ததது ஆனால் உங்களை நேரில் பார்த்தால் வேற மாதிரி இருக்கீங்க. ரொம்ப ஹம்பிளாக இருக்கீங்க" என சொல்கிறான் தர்ஷன். "இதை சமுதாயத்துக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் தான் செய்கிறேன். அது சிலருக்கு தப்பாக இருக்கலாம். நான் யாரையும் கஷ்டப்படுத்தியது கிடையாது. வெண்பாவை தான் கஷ்டப்படுத்தி விட்டேன்" என்கிறார். 
"நீங்க என்னை நல்லா பாத்துக்குறீங்க. அம்மாவும் இருந்தா நல்லா இருந்து இருக்கும்" என்கிறாள் வெண்பா. 

"தர்ஷன் நீ தான் உன்னுடைய அம்மா, தங்கை, சித்திகளுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். இத்தனை நாட்கள் அவர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டது" என சொல்கிறார். தர்ஷனும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு இனிமேல் நான் அவர்களை நன்றாக பார்த்து கொள்வேன் என்கிறான். 

வீட்டுக்கு அப்பத்தா வர அவருக்கு ஸ்வீட் கொடுத்து அவருக்காக வாங்கி வந்த புத்தகத்தை கொடுக்கிறாள் நந்தினி. அப்பத்தா நந்தினியை பாராட்டி இது பத்தாது நீ மேலும் சாதிக்க  வேண்டும் என்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரியும் தர்ஷனும் வர அவர்களுக்கும் ஸ்வீட் கொடுக்கும்போது ஞானமும், கதிரும் வந்து விடுகிறார்கள். மாடியில் இருந்து குணசேகரன் பார்க்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்ததது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Parijatham Serial: வேண்டா வெறுப்பாக ஹனிமூன் செல்லும் விஷால்.. சதி செய்ய ஜாலியாக செல்லும் ஸ்ரீஜா!
Parijatham Serial: வேண்டா வெறுப்பாக ஹனிமூன் செல்லும் விஷால்.. சதி செய்ய ஜாலியாக செல்லும் ஸ்ரீஜா!
Karthigai Deepam: கர்ப்பத்தை கலைக்கச் சென்ற ரோகிணி.. குழந்தையை காப்பாற்றுவானா கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கர்ப்பத்தை கலைக்கச் சென்ற ரோகிணி.. குழந்தையை காப்பாற்றுவானா கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சதி செய்யும் சிவனாண்டி.. சந்தோஷப்படும் மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: சதி செய்யும் சிவனாண்டி.. சந்தோஷப்படும் மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று!
Parijatham: சிக்கிக் கொண்ட ஸ்ரீஜா அப்பா... ஹனிமூன் போகப்போகும் இசை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: சிக்கிக் கொண்ட ஸ்ரீஜா அப்பா... ஹனிமூன் போகப்போகும் இசை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
Embed widget