![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிக்பாஸ் அஸிம் ... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
Bhagyalakshmi Serial Written Update Today (06.12.2022): பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை திருமணம் செய்யக்கூடாது என ஈஸ்வரி சத்தியம் வாங்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
![Bhagyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிக்பாஸ் அஸிம் ... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி bhagyalakshmi serial written update today 6th december 2022 episode 679 Baakiyalakshmi learns that the loan can not be sanctioned without Gopinath ID Bhagyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிக்பாஸ் அஸிம் ... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/6ab4a830408ccde05ffb15c3579c0d5e1670296139271572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் கேட்டரிங் லோன் கேட்டு வங்கிக்கு சென்ற பாக்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.
அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
சத்தியம் வாங்கும் ஈஸ்வரி
ஈஸ்வரி எழிலிடம் அமிர்தாவுடன் நீ நட்பா இரு. அது பிரச்சனையில்லை. ஆனால் காதல், கல்யாணம் பண்ணக்கூடாது என எழில் கையை பிடித்து சத்தியம் பெற்றுக் கொள்ள வேறு வழியில்லாமல் எழிலும் சரி அப்படி பண்ணமாட்டேன் என வாக்குறுதி அளிக்கிறார். இதனைத் தொடர்ந்து பாக்யா,செல்வி இருவரும் கடைக்கு போய் விட்டு வரும் போது ஏரியா செகரட்டரி கிண்டல் செய்கிறார். இப்படி எல்லாம் கட்டப்பையை தூக்கிட்டு இருந்தா தேர்தல்ல ஜெயிக்க முடியாதுன்னு சொல்ல, நான் தேர்தல்ல போட்டியிட போறது இல்ல என தெரிவிக்கிறார்.
அவரை அங்கிருந்து கூட்டி வரும் செல்வி, நானா இருந்தா இப்படி பேசுற பேச்சுக்கு தேர்தல்ல ஜெயிச்சி கவுன்சிலர் ஆகியிருப்பேன் என சொல்கிறார். ஆனால் அத்தை சொன்ன மாதிரி நிறைய வேலை இருக்குன்னு சொல்லி செல்கிறார்.
செழியனை கண்டித்த ஜெனி
ஜெனியிடம் பேசிக்கொண்டிருக்கும் செழியன் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என தன் விருப்பத்தை தெரிவிக்க, ஆனால் உன்னை மாதிரி இருக்கக்கூடது என ஜெனி சொல்கிறார்.இதைக்கேட்டு கடுப்பாகும் செழியன் ஏன் எப்ப பாரு அப்படியே சொல்ற என கேட்கிறார். அதற்கு உன்னோட குணம் எனக்கு பிடிக்கல. நேத்து எதுக்கு எழிலை கோர்த்து விட்ட என ஜெனி கேள்வியெழுப்ப, அவன் பண்ணது எனக்கு பிடிக்கல என செழியன் பதிலளிக்கிறார். அப்ப நாம லவ் பண்ணப்ப பிடிக்கலன்னு என்னைக்காவது அவன் சொல்லிருக்கானா என எழிலுக்கு சப்போர்ட்டாக பேசி செழியனுக்கு புரிய வைக்கிறார்.
கிடைக்காத லோன்
கேட்டரிங் எடுக்க லோன் கேட்டு வங்கிக்கு சென்ற பாக்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. கோபியின் பேன் கார்டு இருந்தால் தான் லோன் கிடைக்கும் என்றும், உங்களுடைய அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் வச்சி எதுவும் பண்ண முடியாது என மேனேஜர் கறாராக சொல்லி விடுகிறார். இதனால் ஏமாற்றமடையும் பாக்யா வீட்டுக்கு செல்கிறார். அங்கு எழில், ஜெனி, ஈஸ்வரி, செல்வி என அனைவரும் பிக்பாஸ் அஸிம் நடித்த சீரியல் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாக்யா விஷயத்தை தெரிவிக்க, அனைவரும் ஆறுதல் கூறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)