மேலும் அறிய

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை..!

வாணி ராணி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் வௌ்ளித்திரை படங்களுக்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளதோ, அதே அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நாடகங்களுக்கும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவற்றில் குறிப்பிட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளங்களும் உண்டு. சில நடிகர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அந்த வரிசையில் நடிகை ராதிகா நடித்த வாணி, ராணி தொடரில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த வேணு அரவிந்த் அந்த தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தவர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான சிகிச்சை பெற்று, அதில் இருந்து மீண்டார்.

இந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு பிறகு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருக்கு மூளையில் கட்டி உருவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மூளையில் உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினார், இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பின்பு வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவரது உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையறிந்த சின்னத்திரை பிரபலங்கள அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். நடிகர் வேணு அரவிந்த் 1985ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான பகல் நிலவு படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். இதையடுத்து, கமல்ஹாசனின் அந்த ஒரு நிமிடம், சிவாஜி நடித்த படிக்காத பண்ணையார் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், தொலைக்காட்சி தொடரில் கவனம் செலுத்திய வேணு அரவிந்த் 1990ல் பொதிகையில் ஒளிபரப்பாகிய நிலாப்பெண் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்னர், அலையோசை, ராசிமூலம், ராகுல்வம்சம், காதல் பகடை, காசளவு நேசம், அக்னி சக்தி, அலைகள், இந்திரன் சந்திரன், ஜனணி, வாழ்க்கை, செல்வி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget