Etharkkum Thunindhavan: எதற்கும் துணிந்தவன் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
எதற்கும் துணிந்தவன் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், குடும்ப பின்னணியில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலாக “வாடா தம்பி” பாடலும், இராண்டாவதாக பாடலாக உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
இந்த பாடலில், நடிகர் சூர்யா முருகன் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்திலிருந்து சும்மா சுர்ரூனு பாடல் வெளியானது. இந்தப் பாடலை பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
5 மொழிகளில் வெளியாகும் வெளியிடப்படும் இந்தப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நீளம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ரெடிங் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ், வினய், சரண்யா பொன்வன்னண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளம் உருகுதையா என்ற முருகன் பக்தி பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.