மேலும் அறிய

200 கோடி மோசடி வழக்கு: திகார் சிறையில் சுகேஷ்: நடிகைகள் சந்திப்பை ‘ரி-கிரியேட்’ செய்த அதிகாரிகள்

சுகேஷ் சந்திரசேகர் தொலைக்காட்சி, சோபா, கார்பெட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய முறையான அலுவலகத்தை சிறையில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சிறை போல அல்ல

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நேற்று நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கு 50 ஆயிரம் பிணையில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் , நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும்  சோபியா சிங் ஆகிய இருவரையும் காவல்துறையினர் திகார் சிறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

200 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் தொடர்புடைய சுகேஷ் சந்திர சேகருக்கு யார் யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில் , நிக்கி தம்போலி மற்றும் நடிகை சோபியா சிங் ஆகியோர் டெல்லி திகார் சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகருடன் மீண்டும் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர். சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, சிறை அதிகாரிகளின் உதவியுடன் அவர்  சட்டவிரோதமான செய்லகளில் ஈடுபட்டு வருவதாக சில காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


200 கோடி மோசடி வழக்கு: திகார் சிறையில் சுகேஷ்: நடிகைகள் சந்திப்பை ‘ரி-கிரியேட்’ செய்த அதிகாரிகள்

இந்த நிலையில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு குழு, நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும் சோபியா சிங் ஆகியோரை சனிக்கிழமையன்று திஹாரின் மத்திய சிறை எண் ஒன்றிற்கு அழைத்துச் சென்றது. அங்கு சுகேஷுடனான சந்திப்பு எப்படியாக இருந்தது என அதிகாரிகள் ‘ரீ-கிரியேட்’ செய்ய சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் போன்ற உயர்மட்ட நபர்கள் உட்பட பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதுவரை பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி மற்றும் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிங்கி இரானி மற்றும் ஒப்பனையாளர் லீபாக்ஷி எல்லவாடி ஆகியோரை விசாரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 பல முக்கிய பிரபலங்கள் திகார் சிறையில் சுகேஷை ஆடம்பரமான கார்களில் வந்து சந்தித்தாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் "சிறைக்குள் சந்திரசேகரை பலர் பார்வையிட்டனர். இருப்பினும், எங்கள் விசாரணைக்கு தொடர்புடையவர்களை மட்டுமே நாங்கள் வரவழைக்கிறோம். தற்போது, ​​சந்திரசேகர் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் “ என்றார். குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் கமிஷனர் ரவீந்திர யாதவ் கூறுகையில்  "இந்த வழக்கில் நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம், அதனால்தான் சந்திரசேகருடன் நடிகைகள் சந்திக்கும் காட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் இந்த மோசடி எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. இது வழக்குத் தொடர எங்களுக்கு உதவும். என்றார்.  சுகேஷ் சந்திரசேகர் தொலைக்காட்சி, சோபா, கார்பெட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய முறையான அலுவலகத்தை சிறையில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சிறை போல அல்ல , அவரது அலுவலகம் போலத்தான் இருந்தது என மற்றொரு காவலர் தெரிவித்திருந்தார்.


200 கோடி மோசடி வழக்கு: திகார் சிறையில் சுகேஷ்: நடிகைகள் சந்திப்பை ‘ரி-கிரியேட்’ செய்த அதிகாரிகள்
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறைக்கு சென்றார். சுகேஷ் சந்திரசேகர் அப்போது சிறையில் இருந்த போது இரு தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் அந்த தொழில் அதிபரில் ஒருவர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் இணைத்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு சில விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
DMK vs Congress: கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
Embed widget