மேலும் அறிய

Prabhu Solomon on Sembi : “ ‘முள்ளும் மலரும்’ மாதிரி எடுக்க முயற்சி பண்ணிருக்கோம்” - மேடையில் எமோஷனல் ஆன பிரபுசாலமன்!

80 ,90 களில் அந்த உதிரி பூக்கள்,முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் கொடுத்த தாக்கத்தை கொடுப்பதற்கு ஒரு முயற்சி எடுத்துள்ளோம்

தனது நகைச்சுவை ஆற்றல் மூலம் நம்மை சிரிக்க வைத்து, நம்மிடையே பரிட்சையமானவர் கோவை சரளா. நகைச்சுவை மட்டுமே இவருடைய பிரத்யேகம் கிடையாது; எமோஷனல் கதாபாத்திரம் மூலமும் பார்வையாளர்களை கலங்க வைக்கும் அவர், திரையரங்கத்தில் நம்மை கலங்க வைப்பதற்காக செம்பியாக நாளைக்கு திரைக்கு வருகிறார்.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 'செம்பி' திரைப்படத்தில் கோவை சரளா உட்பட 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் குமார்,தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்; இத்திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' வாங்கியுள்ளது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளிவர இருக்கும் நிலையில், படகுழுவினர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் வெகு தீவிரமாக இயங்கி வருகின்றனர்.


                                   Prabhu Solomon on Sembi : “ ‘முள்ளும் மலரும்’ மாதிரி எடுக்க முயற்சி பண்ணிருக்கோம்” - மேடையில் எமோஷனல் ஆன பிரபுசாலமன்!

 

அந்த வகையில், இத்திரைப்படத்தின் பிரிமியர் திரையிடல் இன்று வடபழனி பிரசாத் லேப்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன்,"இத்திரைப்படத்தின் மேக்கிங்கிற்காக கவனித்து கடினமாக உழைத்திருக்கிறோம். 2 மணி நேரம் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் திரைப்படத்தை பார்க்க வைப்பதற்கு படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம்.

கடினமாக உழைத்தோம் என்று சொல்லக் கூடாது ,ஏனென்றால் இது நம் கடமை.திரைப்படத்திற்காக செலவழித்த பணத்தை திரையில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்.குறிப்பாக கோவை சரளா தனது 60 வயதில் இத்திரைப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு பெரியது; கோவை சரளா இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் தான் அவர் தன்னை முழுமையாக ஒப்படைத்து நடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் இவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம்.

கதைக்கு அர்ப்பணிப்போடு வேலைகளை பார்த்தார்; இது மட்டுமின்றி,தம்பி ராமையாவும் அஸ்வினும்  கொடுத்த ஒத்துழைப்பும் பெரியது; அஸ்வினிடம் இத்திரைப்படத்தில் நீங்கள் 27 பயணிகளில் ஒருவராக தான் வருவீர்கள் எனக் கூறினேன்.கடைசி சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார்.ஒரு விஷயத்தை உட்கார்ந்து பேசினால் தீராத பிரச்சினை எதுவும் கிடையாது என அவர் நினைத்து வேறு விதமான ஹீரோயிசத்தை கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜீவன்,படத்தொகுப்பாளர் பாபு,இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் கடினமாக உழைத்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசையினால் தான் நான் பல சீன்களை மீண்டும் எழுதியிருக்கிறேன். 50 நாட்கள் வரை ரெக்கார்டிங்,ரீ ரெக்கார்டிங்கிற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 18 நாட்கள் இளையராஜாவோடு பணிபுரிந்த பிரபாகரனுடன் லைவ் ஸ்கோர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் அவ்வளவு இன்புட்ஸ் இருக்கிறது.

 

 

80 ,90 களில் அந்த உதிரி பூக்கள்,முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் கொடுத்த தாக்கத்தை கொடுப்பதற்கு ஒரு முயற்சி எடுத்துள்ளோம்.இதுவரை எடுத்த முயற்சிகளை கைதட்டி உள்ளீர்கள்.இதற்கும் கைதட்டல்கள் கொடுப்பீர்கள் என நினைத்து தான் இங்கு பிரிமியர் செய்கிறோம்." என பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget